நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கீறல் விழுந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா?

 உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருந்து உங்கள் கைகளை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.


ஒரு சிறிய கீறல் மொபைல் போன் ஸ்க்ரீனில் இருந்தால் கூட அதனை பெரிதுபடுத்தாமல் பயன்படுத்துபவர்களுக்கு சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

உதாரணமாக ஒரு மலேசிய நபர் ஸ்க்ரீன் பாதிக்கப்பட்ட மொபைல் போனை பயன்படுத்தியதால் அவருடைய விரல் மற்றும் உள்ளங்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த மொபைல் ஸ்க்ரீனில் உள்ள கண்ணுக்கு தெரியாத சில துகள்கள் அவருடைய கைகளை பாதித்துள்ளது.

அதே போல 23 வயதான அசுவான் இக்பால் அப்துல்லா என்பவர் உடைந்த ஸ்க்ரீனை உடைய மொபைல் போனை சில காலம் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக விரலையே இழக்கும் அபாய கட்டத்திற்கு அவர் சென்றார்.

ஆம்! அவருடைய கைகளில் இருந்த ஸ்க்ரீனில் உள்ள துகள்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதால் அவருக்கு வரவிருந்த மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இன்னும் சில காலம் அவர் இதனை கவனிக்காமல் இருந்திருந்தால் அவர் தன்னுடைய கட்டை விரலை இழந்திருப்பார்.

ஒரு மொபைலில் ஸ்க்ரீன் உடைந்துவிட்டால் அதை மாற்றும் போது செலவும் வைக்க தான் செய்யும். ஆனால் அதை பார்த்தால் பிரச்சனைகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை, தொற்று, மிகுந்த வலி என அவஸ்தைகளை தான் அனுபவிக்க வேண்டும். 



ALSO READ : வெளியில் நீங்கள் கொடுக்கும் மொபைல் எண் என்னவாகிறது தெரியுமா? அதிர்ச்சியளிக்கும் உண்மை

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!