நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தலையில்லாம உயிருடன் இருக்க முடியுமா? முடியும் என்று சொல்லும் நம்ம வீட்டு செல்லம்

 ஒரு உயிரினம் தலை இல்லாமல் வாழ முடியும்! ஆனால் எப்படி சுவாசிக்கும்?


  • கரப்பான் பூச்சி ஒரு வாரம் வரை தலையில்லாமல் உயிர் வாழும்
  • கரப்பான் பூச்சி தாகத்தால் இறக்கிறது
  • இயற்கையின் அதிசயத்திற்கு பின்னால் உள்ள அறிவியல்
தலை இல்லாமல் வாழ்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.   ஆனால், தலை இல்லாமல் சுமார் ஒரு வார காலம் வாழக்கூடிய உயிரினம் பூமியில் இருப்பது உண்மைதான். இந்த உயிரினத்தின் பெயர் கரப்பான் பூச்சி. 

இந்த உயிரினத்தின் உடல் அமைப்பு தலை இல்லாமல் ஒரு வாரம் வாழும்படி அமைந்துள்ளது. கரப்பான் பூச்சிகள் தலை இல்லாமல் ஒரு வாரம் வரை வாழக்கூடியவை.  உண்மையில், இயற்கையின் இந்த அதிசயத்திற்கு பின்னால் அறிவியல் உள்ளது.

கரப்பான் பூச்சியின் உடல் ஒரு சிறப்பு அமைப்பு கொண்டது
கரப்பான் பூச்சியை வடிகால் அருகிலோ, சமையலறையிலோ, குளியலறையிலோ ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள், அது தலை இல்லாமல் ஒரு வாரம் வாழலாம் என்று நினைத்திருக்கிறீர்களா? இது கரப்பான் பூச்சியின் உடலின் சிறப்பு அமைப்பு காரணமாகும்.


தலை இல்லாமல் சுவாசிக்க முடியும்

கரப்பான் பூச்சி தலை இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழ்வதற்குக் காரணம், அதன் உடலில் உள்ள திறந்த இரத்த ஓட்ட அமைப்புதான்.

கரப்பான் பூச்சியின் உடலில் சிறிய துளைகள் உள்ளன, அதன் மூலம் அவை சுவாசிக்கின்றன. எனவே கரப்பான் பூச்சி உயிருடன் வாழ அதற்கு தலை தேவையில்லை.  

கரப்பான் பூச்சிகள் இறப்பதற்கு இதுதான் காரணம்?

தலையில்லாமல் வாழ கரப்பான் பூச்சியால் வாழ முடிந்தாலும், கரப்பான் பூச்சியின் மரணத்திற்கு காரணமும் ஆச்சரியமானது.

தாகத்தால் தான் கரப்பான் பூச்சி இறக்கிறது ஏனென்றால் தலையை இழந்தாலும் சுவாசிக்க முடிந்த கரப்பான் பூச்சிக்கு தண்ணீர் குடிக்க முடியாது. எனவே, உடலில் இருக்கும் நீர்ச்சத்து தீர்ந்தவுடன் அது இறந்துவிடும்.

காரணம், கரப்பான்பூச்சியின் நீர் அருந்தும் உறுப்பு அதன் தலைப் பகுதியில் தான் இருக்கிறது. தலை கழன்றதும், தண்ணீர் குடிக்க முடியாமல் கரப்பான் பூச்சி தாகத்தால் இறந்துவிடும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!