நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிறுவர்களுக்கு பயந்து தலைதெறிக்க ஓடும் பாம்பு! விடாமல் அரங்கேறிய அட்டகாசம்

 பாம்பின் அருகில் இருப்பதற்கும், அதை பிடித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தைரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

இதில் ஒரு சிறுமி பாம்பின் வாலை எளிதாகப் பிடிப்பதை காணலாம். 5 அடி நீளமுள்ள பாம்புடன் குழந்தை விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த கவனக்குறைவு குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து திடீரென சாலையில் வந்தது. அப்போது ஒரு சிறு குழந்தையின் கண்ணில் இந்த பாம்பு படுகிறது. பின்னர் குழந்தை பாம்புடன் விளையாடத் தொடங்குகிறது. அவர் அந்த பாம்பை மீண்டும் மீண்டும் வாலைப் பிடித்து இழுக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காணலாம்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!