நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தினமும் பல் துலக்காமல் இருந்தால் என்னென்ன ஆகும் தெரியுமா? இதய நோய் கூட வருமாம் உஷார்

 பல், மற்றும் வாய் சுத்தமின்மையினால் வாய் சார்ந்த பிரச்சனைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சத்தியையும் குறைக்கிறது.


சமீபத்தில் இரு வாரம் பல் துலக்காமல் இருந்தால் என்ன உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று ஓர் ஆராய்ச்சியை நடத்தினர். 

இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியின் காவலர்கள் என்று கருதப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படுகிறது என்று அந்த ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.

ஈறுகளில் தொற்று

தொடர்ந்து இரு வாரங்கள் பல் துலக்காமல் இருந்ததால், ஈறுகளில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. இந்த ஈறுகளில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட்டதாகவும் மேலும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.


சமீபத்திய அறிவியல் ஆய்வில், ஈறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிப்பதன் காரணமாக, இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய், மறதி நோய் (அல்சைமர்), வாதம், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இயற்கை முறையே சிறந்தது

இந்த ஆய்வில் கலந்துகொண்டு, இரண்டு வரங்கள் பல் துலக்காமல் இருந்தவர்களது வெள்ளை அணுக்களை பரிசோதித்து பார்த்ததில் தான் இவ்வாறான தாக்கங்களும், பாதிப்புகள் உண்டாகலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.


பற்களை வெள்ளை ஆக்கும் என சந்தையில் ஏராளமான பொருட்கள் விற்கப்படுகிறது. ஆனால், அவை யாவும் முற்றிலும் பயனளிப்பது அல்ல என்றும் இயற்கையான பொருள்களை பயன்படுத்துவது தான் சிறந்த முறை என்றும் கூறப்படுகிறது.  



ALSO READ : நகத்தை அழகாக வைத்து கொள்ள ஆசையா? கவலையை விடுங்க.. இதோ சூப்பரான டிப்ஸ்....


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!