நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வெயிலால் முடிக்கு ஏகப்பட்ட பிரச்சனையா, இதுதான் தீர்வு

 கோடை பருவத்தில் முடியை பராமரிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் வலுவான சூரிய ஒளி முடி உதிர்தல் மற்றும் முடி சேதத்தை ஏற்படுத்தும்.


  • தொப்பியை தலைமுடியில் அணியுங்கள்
  • ஷாம்பு இல்லாமல் தலைமுடியில் தண்ணீரை ஊற்றவும்
  • கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்


கோடை காலத்தில் தலைமுடி மற்றும் முகப் பிரச்சனை அதிகரிக்கும், ஏனெனில் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி முடி மற்றும் சருமமும் கூட கடுமையான சூரிய ஒளியால் பாதிக்கப்படுகிறது. இதனால் கோடை காலத்தில் முடி மற்றும் சருமத்தை அதிகம் கவனித்துக்கொள்ள வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், நாம் சருமத்தை கவனித்துக்கொள்கிறோம், ஆனால் முடியைப் பராமரிக்க மறந்துவிடுகிறோம், இதனால் முடி மிகவும் மோசமாகிவிடும். இதனால் முடியின் பொலிவு போய்விடும். மேலும் முடி சேதமடையத் தொடங்குகிறது. கோடை காலம் வந்துவிட்டது. எனவே கொளுத்தும் வெயிலில் இருந்து நம் தலைமுடியை எப்படி பாதுகாப்பது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஸ்கார்ஃப் அணியுங்கள்-

 கோடையில், சூரிய ஒளியில் இருந்து முடியைப் பாதுகாக்க ஒரு ஸ்கார்ஃப் அல்லது தொப்பியை தலைமுடியில் அணியுங்கள். இவ்வாறு செய்வதால் சூரிய ஒளி நேரடியாக உங்கள் தலைமுடியில் படாது. இதன் காரணமாக முடி பாதுகாப்பை சிறந்த முறையில் செய்ய முடியும். 

ஷாம்பு -

 கோடைக்காலத்தில் பலர் தினமும் ஷாம்பு பயன்படுத்துகின்றனர். இது உங்கள் முடியை சேதப்படுத்தும். மேலும், சூரிய ஒளியின் தாக்கமும் அதிகமாக இருக்கும். நீங்கள் தலைமுடியைக் கழுவ விரும்பினால், முதலில் ஷாம்பு இல்லாமல் தலைமுடியில் தண்ணீரை ஊற்றவும். அதே சமயம் வாரம் இருமுறை மட்டுமே ஷாம்பு பயன்படுத்தவும். இது தவிர, ஷாம்பு தடவிய பின் முடியை அதிகமாக தேய்க்க வேண்டாம், அது முடிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

கண்டிஷனர் - 

உங்கள் தலைமுடியைக் கழுவும் போதெல்லாம் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடிக்கு முழு ஊட்டச்சத்து கிடைக்கும். இதன் காரணமாக முடி பிரச்சனை நீங்கும். சூரிய ஒளியால் சேதமடைந்த முடி மீண்டும் ஊட்டமளிக்கிறது, இது உங்கள் தலைமுடிக்கு உயிர் கொடுக்கிறது. இதனுடன், இயற்கையான பளபளப்பும் அதிகரிக்கிறது.


கூந்தலில் ஹேர் பேக்கைப் பயன்படுத்துங்கள்-

 முடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க சில பயனுள்ள ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம். குறிப்பாக கூந்தலுக்கு குளிர்ச்சி தரும் ஹேர் பேக்குகளை பயன்படுத்துங்கள். இதனால் கூந்தலில் உள்ள வெப்பம் குறையும். மேலும் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

முடியை சீவுவதைக் குறைக்கவும் - 

சூரிய ஒளியில் இருந்து வீடு திரும்பிய பின் உங்கள் தலைமுடியை சீப்புவதைத் தவிர்க்கவும். இதனால் கூந்தலில் வெப்பம் அதிகரிக்கும். இது முடிக்கு சேதத்தை ஏற்படுத்தும். 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!