நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தண்ணீர் அருந்த சென்ற சிங்கம்! முதலை கூட்டத்தில் மாட்டிக்கொண்ட காட்சி... நடந்தது என்ன?

 காட்டின் ராஜாவான சிங்கத்துடன் முதலை ஒன்று சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குடிக்கச் சென்ற சிங்கம் ஒரு முதலைக் கூட்டத்தை எதிர்கொள்கிறது. அதனால் அங்கு ஒரு மோசமான சூழல் உருவாகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், சிங்கம் முதலில் ஆற்றில் தண்ணீர் குடிக்கச் செல்வதை காண முடிகின்றது. ஆனால் அங்குள்ள காட்சியை பார்த்து சற்று அரண்டுவிடுகிறது.

ஏனெனில் ஆற்றில் ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 10 முதலைகள் கொண்ட கூட்டமே தண்ணீரில் காணப்படுகின்றன. ஆனால், இதற்கெல்லாம் சிங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. அது பின்வாங்காமல் முதலையைத் தாக்க முயல்கிறது. அப்போது பல முதலைகள் சேர்ந்து சிங்கத்துக்கு பதிலடி கொடுக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!