நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பறவைகளின் 11 மாடி ‘அபார்மெண்ட்’; நீச்சல் குளமும் அதில் உண்டு..!!

 மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு என்பது அனைவருக்கு தெரிந்த விஷயம். ஆனால் இங்கே ஒரு பறவைக்கான குடியிருப்பு கட்டப்பட்டிருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்.


பெருகிவரும் மக்கள்தொகையால், பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளும், உயரமான கட்டிடங்களும்  பொதுவான காட்சியாக மாறிப் போன நிலை தான் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறி இரண்டு அல்லது மூன்று BHK குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். 

இப்போது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதைக் கேட்டால் நமக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா.... ஆம், ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில்  பறவைகளுக்கான குடியிருப்பு ஒன்று காணப்பட்டது. பறவைகளுக்காக  கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், பறவைகள் உண்ண உறங்க வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் உள்ளே இருக்கும் நீச்சல் குளத்தில் குளிக்கவும் முடியும்.

11 மாடி ரெடிமேட் அபார்ட்மெண்ட்

ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் இப்படி ஒரு தனித்துவமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வைரலாகியுள்ளன. இந்த பறவையின் அபார்ட்மெண்ட் 11 மாடிகள் கொண்டது. எல்லா வசதிகளும் அதில் உள்ளன. இதில் பறவைகள் குளிப்பதற்கு நீச்சல் குளமும் தயார் செய்யப்பட்டுள்ளதுதான் மிகவும் ஆச்சரியமான விஷயம்.

இந்த குடியிருப்பில் சுமார் 1100 பறவைகள் வாழலாம். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஸ்ரீதுன்கர்கர் என்ற இடத்தில் உள்ள டோலியாசர் கிராமத்தில் இந்த சிறப்பு அடுக்குமாடி குடியிருப்பு தயார் செய்யப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கும்

இந்த குடியிருப்பில் பறவைகள் வந்து கூடு கட்டலாம். மேலும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதை தயார் செய்ய சுமார் ரூ.5 லட்சம் செலவானது என கூறப்படுகிறது. எந்தப் பக்கத்திலிருந்தும் பறவை வந்து குடியேறும் வகையில், குவிமாடம் வடிவில் இந்தக் குடியிருப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பல பறவைகள் ஏற்கனவே வந்து வாழத் தொடங்கியுள்ளன. 




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!