தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தர்பூசணி வெட்டும்போது இதை ஃபாலோ பண்ணுங்க… ஒரே நிமிடத்தில் விதைகள் இல்லா துண்டுகள் ரெடி!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
கோடைக்காலத்தில் மக்களின் தண்ணீர் தாகத்தையும் வெப்பத்தையும் தனிப்பது தர்பூசணிப் பழம்தான். இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது பழத்தில் இருக்கும் விதைகளை நீக்க பலரும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகவே தர்பூசணியை விதைகள் இல்லாமல் துண்டுகளாக வெட்ட இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க…
தர்பூசணி என்கிற தண்ணீர் பழத்தில் நிறைந்துள்ள நீர்ச்சத்து இனிப்பு சுவை வெயிலின் வெப்பத்தில் சோர்ந்து போயுள்ளவர்களின் தாகத்தை தனிப்பதோடு அவர்களை உடனடியாக உற்சாகப்படுத்துகின்றன. அதனால்தான், கோடைக்காலத்தில் பலரும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், தர்பூசணி பழத்தில் உள்ள விதையை எடுத்துவிட்டு சாப்பிடுவதில் பலரும் சிரமப்படுகின்றனர். தர்பூசணி பழத்தை வெட்டும்போது விதைகளை நீக்கவும் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படி தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை எடுக்க சிரமப்படுபவர்களுக்காக தர்பூசணி பழத்தை விதைகளை எளிதாக அகற்றி விதையில்லா தர்பூசணி பழத்தை சாப்பிட இங்கே ஒரு சூப்பரான ஐடியா தருகிறோம்.
நன்றாக பழுத்த தர்பூசணி பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். தர்பூசணி பழத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வெளிரிப்போய் இருக்கும். அதுதான் ஒரு தர்பூசணி பழம் நன்றாக பழுத்துள்ளது என்பதற்கான அடையாளம். அப்படி நன்றாக பழுத்த தர்பூசணியை வாங்கி வந்து விதையில்லாமல் வெட்ட வேண்டும் என்றால், முதலில், அந்த தர்பூசணி பழத்தை குறுக்கில் இரண்டு பாதியாக வெட்டுங்கள்.
ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் ஒரு சிறிய பகுதியை வெட்டுங்கள். பிறகு, தர்பூசணியை ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து வைத்து மேல் தோலை சிவப்பு பகுதி சேதம் அடையாமல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு, 2 செ.மீ அளவு தடிமனில் வட்டவட்டமாக தர்பூசணியை நறுக்கிக்கொள்ளுங்கள். பிறகு, வட்டமாக நறுக்கிய தர்பூசணியில் இருந்து எளிதாக தர்பூசணி விதையை நீங்குங்கள். பிறகு, வட்ட வட்டமாக நறுக்கிய தர்பூசணியை வரிசையாக வைத்து மொத்தமாக துண்டுகளாக நறுக்கி விதையில்லாமல் சுவையான தர்பூசணியை சாப்பிடுங்கள்.
இனிமேல், தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். தொப்பையை குறைக்க மூன்று சிறந்த பயிற்சிகள்: 1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி முதலில்...
பசிக்குது ஆனா கையில் காசில்லையா? அப்போ இலவசமாகவே பிரியாணி எடுத்து சாப்பிடலாம்! பசிக்குதா எடுத்துக்குங்க..." இப்படி ஒரு போர்ட் வைக்கப்பட்டிருக்கிறது அந்த கடையில். அப்பகுதி வழியாக வருவோரும், போவோரும் கடையை பார்த்து ஒரு நிமிடம் உண்மைதானா என்று தங்களைக் கிள்ளி பார்க்கிறார்கள். அப்படி என்ன ஸ்பெஷல் அந்த கடையில் பார்ப்போம். கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ரெட்பீல்ஸ் சாலையில் வசித்து வருபவர்கள் சதீஷ், சப்ரினா தம்பதியினர். சதீஷ் திருப்பூரில் முட்டை விற்பனை கடை வைத்து வருகிறார். சப்ரினா பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கிறார். சப்ரினா தன்னுடைய வீட்டு முன்பு ஒரு சாப்பாடுக் கடை வைத்திருக்கிறார். சாலையோரமாக இருக்கும் சிறிய கடை அது. நாள்தோறும் மதியம் 12 மணிக்கு கடை திறந்தால், 3 மணி வரைதான் கடை இயங்கும். அந்த பிரியாணி கடையில், ஒரு பிளேட் பிரியாணி எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். வீட்டிலேயே பிரியாணி செய்து அதை பொட்டலங்களாகக் கட்டி, கடையில் வைத்துள்ளார் சப்ரினா... அந்த ஒரு பெட்டி மீது நிறைய பிரியாணி பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். 3 மணிக்கு முன்பே அத்தனை பொட்டல...
Comments
Post a Comment