தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும். இதை தயாரிக்கும் முறை: கிராம்பு - 2, ஏலம் - 2, சுருள் இலவங்கப்பட்டை - 1, அதிமதுரம் சிறுதுண்டு, சுக்கு சிறுதுண்டு, மிளகு - 10, மஞ்சள் சிறிதளவு இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும். இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ : மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தர்பூசணி வெட்டும்போது இதை ஃபாலோ பண்ணுங்க… ஒரே நிமிடத்தில் விதைகள் இல்லா துண்டுகள் ரெடி!
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
கோடைக்காலத்தில் மக்களின் தண்ணீர் தாகத்தையும் வெப்பத்தையும் தனிப்பது தர்பூசணிப் பழம்தான். இந்த தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது பழத்தில் இருக்கும் விதைகளை நீக்க பலரும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகவே தர்பூசணியை விதைகள் இல்லாமல் துண்டுகளாக வெட்ட இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணுங்க…
தர்பூசணி என்கிற தண்ணீர் பழத்தில் நிறைந்துள்ள நீர்ச்சத்து இனிப்பு சுவை வெயிலின் வெப்பத்தில் சோர்ந்து போயுள்ளவர்களின் தாகத்தை தனிப்பதோடு அவர்களை உடனடியாக உற்சாகப்படுத்துகின்றன. அதனால்தான், கோடைக்காலத்தில் பலரும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால், தர்பூசணி பழத்தில் உள்ள விதையை எடுத்துவிட்டு சாப்பிடுவதில் பலரும் சிரமப்படுகின்றனர். தர்பூசணி பழத்தை வெட்டும்போது விதைகளை நீக்கவும் சிலர் சிரமப்படுகின்றனர். அப்படி தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை எடுக்க சிரமப்படுபவர்களுக்காக தர்பூசணி பழத்தை விதைகளை எளிதாக அகற்றி விதையில்லா தர்பூசணி பழத்தை சாப்பிட இங்கே ஒரு சூப்பரான ஐடியா தருகிறோம்.
நன்றாக பழுத்த தர்பூசணி பழத்தை வாங்கிக்கொள்ளுங்கள். தர்பூசணி பழத்தின் ஏதாவது ஒரு பகுதியில் வெளிரிப்போய் இருக்கும். அதுதான் ஒரு தர்பூசணி பழம் நன்றாக பழுத்துள்ளது என்பதற்கான அடையாளம். அப்படி நன்றாக பழுத்த தர்பூசணியை வாங்கி வந்து விதையில்லாமல் வெட்ட வேண்டும் என்றால், முதலில், அந்த தர்பூசணி பழத்தை குறுக்கில் இரண்டு பாதியாக வெட்டுங்கள்.
ஒரு பாதியை எடுத்து அடிப்பகுதியில் ஒரு சிறிய பகுதியை வெட்டுங்கள். பிறகு, தர்பூசணியை ஒரு பெரிய தட்டில் கவிழ்த்து வைத்து மேல் தோலை சிவப்பு பகுதி சேதம் அடையாமல் சீவிக்கொள்ளுங்கள். பிறகு, 2 செ.மீ அளவு தடிமனில் வட்டவட்டமாக தர்பூசணியை நறுக்கிக்கொள்ளுங்கள். பிறகு, வட்டமாக நறுக்கிய தர்பூசணியில் இருந்து எளிதாக தர்பூசணி விதையை நீங்குங்கள். பிறகு, வட்ட வட்டமாக நறுக்கிய தர்பூசணியை வரிசையாக வைத்து மொத்தமாக துண்டுகளாக நறுக்கி விதையில்லாமல் சுவையான தர்பூசணியை சாப்பிடுங்கள்.
இனிமேல், தர்பூசணி பழத்தை சாப்பிடும்போது விதைகளை எடுக்க முடியாமல் சிரமப்படாதீர்கள், தர்பூசணியை வெட்டும்போது இந்த ஐடியாவை ஃபாலோ பண்ணி நறுக்கினால் ஒரு நிமிடத்தில் விதையில்லாமல் தர்பூசணி துண்டுகள் ரெடி, அப்படியே சாப்பிடுங்கள்.
ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் நிறுவனம் சோஃபியின் தங்கை என கூறி ” க்ரேஸ் ” என்ற புதிய ரோபோவை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. க்ரேஸ் சுகாதார துறையில் தனது பங்களிப்பை வழங்கும் என இதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவிக்கிறது. சோஃபியா_ரோபட் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த செய்திகளை கடந்து செல்லும் பொழுதுதெல்லாம் ரோபோக்களின் வளர்ச்சி நம்மை பிரம்மிக்க வைப்பதாக இருக்கும். குறிப்பாக ஹுமனாய்ட் ரோபோக்கள் என்று அழைக்கப்படும் மனித ரோபோக்களின் வளர்ச்சி நம்பிக்கைக்கு அப்பால் பல மாற்றங்களை கண்டுள்ளது. இந்த வகை ஹுமனாய்ட் ரோபோக்கள் மனிதர்களை போலவே சிந்தித்து செயல்படும் வகையில் உருவாக்கப்படும். இவ்வகை ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில்தான் பல நிறுவனங்கள் போட்டி போட்டு ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமான ஹுமனாய்ட் ரோபோவான சோஃபியா பலரின் கவனத்தை பெற்றது. ஹாங்காங்கை சேர்ந்த பிரபல ”ஹேன்ஸன் ரோபட்டிக்ஸ் “ என்ற நிறுவனம் இந்த சோஃபியாவை அறிமுகப்படுத்தியது. மனிதர்களை போலவே முக பாவனைகளை வெளிப்படுத்துவது, கேட்கும் கேள்விகளுக்கு சாதூர்யமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் பதிலளிப்...
தொடர் இருமல், தொண்டைப்புண், தொண்டை வீக்கம், தாடை வலி, தலைவலி, தலைபாரம் , மூக்கடைப்பு, அடிக்கடி தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். குளிர் அல்லது மழைக்காலம் வந்தாலே சளி, தொண்டை பிரச்சனைகள் வந்துவிடும். அப்படி சளி சேர்ந்துவிட்டாலே குறைந்தது 7 முதல் 14 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் அதற்குள் நாம் படும் பாடு சொல்லி மாளாது. குறிப்பாக சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலம் என்பது நெருக்கடியான பருவநிலை எனலாம். அப்படி, சைனஸின் ஒரு வகைதான் தொண்டையில் சளி கட்டுதல். பெரும்பாலானோர் அவதிப்படுவதும் இந்த பிரச்சனையால்தான். இது வந்துவிட்டாலே குரலில் மாற்றம், தொண்டை வலி , வீக்கம் , எதையும் சாப்பிட முடியாது , கண்ணங்கள் , தாடைகளில் வலி என பல அறிகுறிகள் இருக்கும். இதனால் அன்றாட வேலைகளில் கூட ஈடுபட முடியாது. இவ்வாறு தொண்டையில் சளி கட்ட என்ன காரணம் தெரியுமா..? அதாவது குளிர்காலத்தில் காற்றின் மூலம் பரவும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது சைனஸ் பிரச்சனை உருவாகிறது. இந்த பாக்டீரியாக்கள் சைனஸ் அறைக்குள் சென்று சளி சவ்வுகளை வீங்க வைத்து அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால்...
பொதுவாக தொலைந்து போன ஸ்மார்ட்போனை ஒரு சில எளிய வழிமுறைகள் மூலம் மீண்டும் கண்டுபிடிக்க முடியும். குறிப்பாக ஆப்பிள் Find my phone அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் Find your phone அம்சங்களும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் ஸ்மார்ட்போனுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். அதுமட்டுமின்றி Google Map மூலம் கூட கண்டுபிடிக்க முடியும். கூகுள் மேப்ஸ் மூலம் நீங்கள் தவறவிட்ட ஸ்மார்ட்போனினை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும். தற்போது அவை எப்படி என இங்கே பார்ப்போம். முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.co.in வலைத்தள முகவரிக்கு செல்ல வேண்டும். தவறவிட்ட ஸ்மார்ட்போனில் லின்க் செய்யப்பட்டிருந்த கூகுள் அக்கவுன்ட் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து ‘Your timeline' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில் ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். உங்களது சாதனத்தின் லொகேஷன் விவரங்களை மேப்ஸ் தற்போதைய ...
Comments
Post a Comment