நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பேன் தொல்லையா? அப்ப இத செய்யுங்க...

பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.
பேன்கள் தலை, முடி, முதுகு மற்றும் கழுத்து மீது ஊர்ந்து, நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பேன்களின் முட்டைகள் நிட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன, இது முடியுடன் ஒட்டிக்கொள்கிறது, மேலும் இது அரிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவரின் தலை தொடர்பிலிருந்து மற்றொருவருக்கு பேன்கள் உருவாகின்றன. பேனால் குதிக்கவோ அல்லது பறக்கவோ முடியாது. ஆனால் முடியின் வழியாக பேன் மற்றொருவருக்கு பரவுகிறது. பேன்கள் கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் பேன் என்பது கெட்ட மற்றும் சுகாதாரமின்மை பிரச்சினை அல்ல.

பேன்கள் நமது உச்சந்தலையில் எரிச்சலையும் நமைச்சலையும் ஏற்படுத்துகிறது. பேன் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர், தலையை அடிக்கடி சொறிந்து கொண்டிருப்பார். பேன் இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும். மேலும் இரவுநேரங்களில் தூக்கமின்மைக்கு பேன்கள் கூட ஒரு காரணமாக இருக்க முடியும்.

3 வகை பேன்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சீப்புகள், கேப்ஸ், தூரிகைகள் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்களை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது இவ்வாறு சுத்தம் செய்வதை வழக்கமாக்கி கொள்ளவும்.

சீப்புகள், முடி தூரிகை போன்ற பொருட்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்துங்கள். முடிந்தவரை அடிக்கடி உங்கள் படுக்கை விரிப்புகளை மாற்றவும். உங்கள் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கழுவவும், இதனால் பேன்களை அகற்றி, பேன்கள் பரவுவதை தடுக்க முடியும்.

தலை மற்றும் முடிக்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தடவவும். தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பேன்களை அழிக்க உதவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!