நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் உடலின் முக்கிய உறுப்புகள் காலி! கவனம் தேவை

 உடலில் உள்ள முக்கிய உறுப்புகளுக்கு சில உணவுகள் ஆகவே ஆகாது. அது போன்ற உணவுகளை தவிர்ப்பது நலம் பெயர்க்கும்.




நுரையீரல்

ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமற்ற உணவு அல்ல., அதில் பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இதை அதிகம் சாப்பிடுவதால் உடலில் வாயு உண்டாகும். அதிகப்படியான வாயு உங்கள் நுரையீரலை அதிக வேலை செய்ய வழிவகுக்காது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும்.

இதயம்

சிவப்பு இறைச்சி உணவுகளான மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தவிர்க்குமாறு பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். சிவப்பு இறைச்சியில் இருக்கும் கார்னைடைன் எனும் மூலப்பொருள் இதயத்தை பாதிக்கும் Trimethylamine-N-oxide (TMAO) -ஐ உருவாக்குகிறது.


பீட்சாவில் நிறைய கிரீஸ், சோடியம் மற்றும் கலோரிகள் உள்ளன, இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தானது. மேலும் அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்கள் அதிகமாக உடலில் சேரும் போது ஆபத்தாகிறது.

கல்லீரல்

பிரஞ்சு ப்ரை மற்றும் பர்கர் போன்ற கொழுப்புள்ள உணவுகளை உணவில் சேர்ப்பதை தவிருங்கள். அதிகப்படியான கொழுப்புகள் கல்லீரலில் படிந்து சிரோசிஸ் என்ற கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.


அதிகப்படியான சுகர் எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும். எனவே குறைந்தளவு மட்டுமே சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள். 






Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!