நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கடற்கரையில் 2500 பேர் கூடி நிர்வாண போட்டோஷூட்.. விழிப்புணர்வுக்காக நடந்த முக்கிய நிகழ்வு!

 முன்னணி புகைப்பட கலைஞர் ஸ்பென்சர் டுனிக் தோல் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக 2,500ஐ வைத்து மெகா நிர்வாண போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.


ஆஸ்திரேலியா நாட்டில் தோல் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நோக்கில் 2,500க்கும் மேற்பட்டோர் நிர்வாணமாக திரண்டு போட்டோ ஷூட் நடத்தினர். உலகின் முன்னணி புகைப்படக் கலைஞராக திகழ்பவர் ஸ்பென்சர் டுனிக். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு புகழ்பெற்றவராவார். இந்நிலையில், இவர் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு மெகா நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகிலேயே அந்நாட்டில் தான் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இந்தாண்டு மட்டும் சுமார் 17,756 பேருக்கு தோல் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 1,281 பேர் இந்த நோய் காரணமாக இறந்துள்ளனர்.இந்நிலையில், தோல் மற்றும் உடல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு போட்டோ ஷூட் நடத்த திட்டமிட்ட ஸ்பென்சர் டுனிக், அதற்கான இடமாக சிட்னியின் போண்டி கடற்கரையை தேர்வு செய்தார்.

அங்கு சுமார் 2,500க்கும் மேற்பட்டோரை திரள வைத்து மெகா நிர்வாண போட்டோ ஷூட்டை நடத்தினார். போட்டோ ஷூட்டிற்காக அதிகாலை வேளையான சூரிய உதயத்தின் போதே திரண்ட மக்கள் கடற்கரையில் கடலின் முன்னர் நின்று நிர்வாணமாக போஸ் கொடுத்தனர். இது தொடர்பாக ஸ்பென்சர் கூறுகையில், "தோல் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த எனக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். எனது புகைப்படக் கலையின் மூலம் உடலை கொண்டாடி அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இங்கு வந்துள்ளேன்" என்றார்.

நிர்வாண போட்டஷூட்டிற்காக விதவிதமான லோகஷன்களை தேர்வு செய்து அசத்தும் டுனிக், 2010ஆம் ஆண்டில் சிட்னி ஓபேரா ஹவுசில் 5,200 பேரை வைத்து நிர்வாண போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.






 


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!