நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பூண்டு தண்ணீரை இப்படி குடித்தாலே போதும்! பல நோய்கள் காணாமல் போகும்....

 பொதுவாக நமது வீட்டிலிருக்கும் சில பொருட்களை கொண்டு எமது உடலிருக்கும் பெரும்பாலான  நோய்களை குணப்படுத்த முடியும்.

அந்த வகையில் சமையறையிலிருக்கும் பூண்டை என்ன வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

பூண்டின் மகிமை

பொதுவாக பூண்டை பலர் அதனுடைய வாசணையின் காரணமாக உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இதில் பல நோய்களை குணமாக்குவதற்கான மருத்துவ குணங்கள் இருக்கிறது.

பூண்டை சமைத்து மற்றும் பச்சையாக உணவில் சேர்த்து கொள்வதை விட தண்ணீரில் சேர்த்து பானமாக பருவதில் அதீத பயனைப் பெற முடிகிறது.


இரண்டு பூண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் பருக வேண்டும், இவ்வாறு பருகும் போது இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் பல நோய்கள் குணமாகும்.

வைரஸ் நோய்கள் இருக்கும் போது பூண்டு நீரை பருக வேண்டும். ஏனெனில் பூண்டில் இருக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுடன் எதிர்த்து போராடுகிறது.


செரிமான பிரச்சினையுள்ளவர்கள் பூண்டை தண்ணீருடன் சேர்த்து தினமும் பருக வேண்டும்.

வயிற்று வலி, வாயு, பிடிப்புகள், வீக்கம், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் முற்றாக குணமடையும்.


பொதுவாக மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக வயிற்றுவலி அதிகமாக இருக்கும். இது போன்ற காலங்களில் காலையில் பூண்டுடன் தண்ணீரை சேர்த்து பருக வேண்டும். இது ரத்த ஓட்டம் சீராக அமைத்து வலிக்கு நிவாரணம் தருகிறது.  








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!