நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

’எப்படி இருந்த நான்..!’ 34 கிலோ ரோமத்திலிருந்து விடுதலையான குஷியில் செம்மறி ஆடு

 5 வருடங்களாக பாரமாக இருந்த 34 கிலோ ரோமத்திலிருந்து செம்மறி ஆட்டிற்கு விடுதலை கொடுத்துள்ளனர் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவன தன்னார்வல்கர்கள்.


ஆஸ்திரேலியாவில் பாரக் என்று பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று 5 வருடங்களாக முடிவெட்டப்படாத நிலையில் காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்திருக்கிறது. நீளமாக வளர்ந்த ரோமமானது பாரக்கிற்கு பாரத்தை கொடுத்தது மட்டுமல்லாமல் அதனால் பார்க்கமுடியாத அளவிற்கு கண்களையும் மூடி மறைத்துவிட்டது.

காட்டுக்குள் சுற்றித் திரிந்த பாரக்கை லான்ஸிஃபில்டில் உள்ள எத்கார்ஸ் மிஷன் என்ற வனவிலங்கு மீட்பு அறக்கட்டளை மீட்டுச்சென்றது. 34 கிலோ எடையுள்ள அடர்த்தியான ரோமத்தை அகற்றியபிறகு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரக்கின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 5 வருடங்களாக முடி கத்தரிக்கப்படவில்லை என்று கூறும் தன்னார்வலர்கள், சில நிமிடங்களில் முடியை அகற்றி பாரக்கிற்கு மீண்டும் பார்வை கொடுத்துவிட்டதாக கூறி மகிழ்ச்சியடைகின்றனர்.


இதுகுறித்து எத்கார்ஸ் மிஷன், ‘’பாரமான முடியால் இறக்கும் நிலையில் இருந்த பாரக்கிற்கு மீண்டும் வாழ ஓர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது’’ என்று ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளது.



ALSO READ :  கண்ணில் விரலை விட்டு ஒரே குத்து... சிறுவன் நடத்திய கவுன்டர் அட்டாக்கால் தப்பி ஓடிய சிறுத்தைபுலி!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!