நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சிம்லாவில் நேற்று ஒரேநாளில் 57 சென்டிமீட்டர் பனிப்பொழிவு... சிலிர்க்க வைக்கும் இயற்கைக் காட்சி!

இமாச்சலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவில் கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 57 சென்டிமீட்டர் பனி பொழிந்துள்ளது.

குளிர்காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாடவும், சிம்லா - கால்கா மலை ரயிலில் சென்று இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கவும் உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம்.

இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு வழக்கத்தைவிடக் குளிரும் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. சிம்லாவில் நேற்று ஒரேநாளில் 57 சென்டிமீட்டர் பனி பொழிந்துள்ளது. 1991ஆம் ஆண்டு ஒருநாளில் 54 சென்டிமீட்டர் பனி பொழிந்ததே இதற்கு முன் அதிக அளவாக இருந்தது.

சாலை, தரை, மலைமுகடு, மரங்கள், கூரைகள், வாகனங்களின் மேற்பரப்பு ஆகிய அனைத்தும் பனி மூடி வெண்மையாகக் காட்சியளிக்கிறது. கடுங்குளிரை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் தரையில் உறைந்த பனிக்கட்டிகளை அள்ளி வீசி விளையாடி மகிழ்ந்தனர்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!