நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சென்னையில் கடற்படை அதிகாரி கடத்தப்பட்டு பணம் கேட்டு தராததால் தீ வைத்து கொளுத்திக் கொன்ற கொடூரம்.

சென்னையில் கடற்படை அதிகாரியை கடத்திச்சென்று மகாராஷ்டிரா காட்டுப்பகுதியில் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஐ.என்.எஸில் பணிபுரிந்த ஜார்க்கண்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரி மிதிலேஷ் தூபே கடந்த 31ஆம் தேதி தனது சொந்த ஊருக்குச் செல்ல சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மாயமானதாக பெற்றோர் புகார் அளித்திருந்தனர். விசாரணையில், கடந்த 31 ஆம் தேதி சென்னை விமான நிலையம் அருகே 3 பேர் துப்பாக்கி முனையில் அவரை கடத்தியதும், 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டு 3 நாட்கள் சென்னையில் அடைத்து வைத்ததும் தெரியவந்தது.

மேலும் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் மிதிலேஷ் தூபேவை கார் மூலம் மகாராஷ்டிரா - குஜராத் எல்லை காட்டுப்பகுதியான வேவாஜி என்ற கிராமத்தில் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!