நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலியின் செயல்பாடு நிறுத்தம்.

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து தமிழகத்தில் டிரீம் லெவன் செயலியின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.

அனைத்து ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழகத்தில் டிரீம் லெவன் செயலி பிற்பகல் 3 மணியில் இருந்து செயல்படவில்லை.

தமிழகத்தில் வசிப்போரும், வங்கி கணக்கு வைத்திருப்போரும் டிரீம் லெவன் செயலியை பயன்படுத்த முடியாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!