நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்று பூமிக்கு நெருக்கமாக கடந்து செல்லும் பிரமாண்ட குறுங்கோள்

இன்று பூமி அருகே கடந்து செல்லும் குறுங்கோளால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2001 ஃஎப் ஓ 32 என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் குறுங்கோள், பூமியில் இருந்து இரண்டு மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல நூறு மீட்டர் நீளமும், விட்டமும் கொண்ட இந்தக் குறுங்கோளை கடந்த 20 ஆண்டுகளாக கண்காணித்து வருவதாகக் கூறும் விஞ்ஞானிகள், சூரியனை 810 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதையும் கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை தற்போது பூமி அருகே கடந்து செல்லும் போது இதன் வேகம் மணிக்கு ஒரு லட்சத்து 24 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!