நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மனைவியின் செயலால் அதிர்ச்சியடைந்த கணவன் - வைரல் வீடியோ

 சோசியல் மீடியாவில் தினமும் பலவகையான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சென்டிமென்ட்டாக இருந்து உங்கள் கண்களில் கண்ணீரை வரவைக்கும். சில வீடியோக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்து நகைச்சுவையாக இருக்கும். சமீபத்தில் சிறுவன் ஒருவர் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


ஆனால் எப்போதும் இணையத்தில் பலரால் ரசிக்கப்படும் வீடியோ என்றால் கணவன், மனைவிக்குள் நடைபெறும் அன்பு சண்டை தான். அதிலும் மனைவியிடம் சிக்கி சின்னபின்னமாகும் கணவரின் வீடியோக்கள் பல இணையத்தில் கொட்டி கிடக்கும். அதில் ஒன்று தான் தற்போது பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.

ஆனாலும் உங்களுக்கு எல்லாம் ரொம்ப குசும்பு தான், ஒருத்தர் சிக்கிட்டா இப்புடி எல்லாம் செய்வீங்க என்று சொல்ல வைக்கிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்த பின் எந்த கணவரும் மனைவிக்கு உதவி செய்ய சமையலறைக்கு வருவதற்கு யோசிப்பார்கள்.

இந்த வீடியோவில் வரும் நபர் மும்முரமாக சமையல் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பெண் வருகிறார். அவர் அந்த ஆணின் மனைவியாக தான் இருப்பார் என்று அவரின் செயலில் இருந்தே தெரிகிறது. பர்தா அணிந்திருக்கும் அந்த பெண் கயிறு மூலம் கட்டப்பட்ட தண்ணீர் கேன் ஒன்றை அவர் கையில் கொடுக்கிறார். பின் அதன்மீது மாவு நிறைந்த தட்டை வைக்கிறார். அவர் இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.



ஆனால் அந்த பெண் கயிறை ஒரு கத்திரிகோலால் வெட்டிவிட, எடை சற்று என குறைந்ததால் அதன் மீது இருந்த மாவு தட்டு அந்த நபரின் முகம் முழுவதும் தெறித்து விழுந்தது. வேடிக்கையான இந்த வீடியோ இணையத்தில் வைராகி உள்ளது. பலர் இந்த வீடியோவை பலர் ஷேர் செய்தும், தங்களது கருத்தை பகிர்ந்தும் வருகின்றனர்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!