Posts

Showing posts from October, 2021

நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அழகு, மென்மை நளினம் - கலம்காரி புடவைகள்

Image
கலம்காரி பிரிண்டட் புடவைகள் இப்பொழுது ஹாட் டிரெண்டில் உள்ள புடவையாக சொல்லலாம். வீட்டில் அன்றாடம் அணியவும், அலுவலகத்திற்கு அணிந்து செல்லவும் ஏற்றவையாக இவை உள்ளன. கலம்காரி என்பது ‘கலாம்’ - எழுதுகோல் மற்றும் ‘காரி’- கைவினைத்திறன் என்ற இரண்டு பாரசீக வார்த்தைகள் இணைந்த ஒரு சொல்லாகும். பேனாவால் வடிவங்களை வண்ணங்களில் தீட்டி உருவாக்கப்படும் கலையே ‘கலம்காரி’. கலம்காரி புடவைகள் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோல் கலம்காரி டிசைன்களை அச்சிடுவதற்கு அதிக அளவில் இயற்கை சாயங்களையே உபயோகப்படுத்துகிறார்கள். கலம்காரி சில்க் புடவைகள்:- கலம்காரி சில்க் புடவைகள் நேர்த்தி மற்றும் க்ளாஸாக புடவை அணியும் பெண்களுக்கு ஏற்றவை. ப்ளாக் பிரிண்ட்டுகளுடன் வரும் இவ்வகை புடவைகள் அணிபவருக்கு எளிதாகவும், வசதியாகவும் இருக்கும், அனைத்து சந்தர்ப்பங்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு அணிந்து செல்ல ஏற்ற புடவைகள் என்று இவற்றைச் சொல்லலாம். கலம்காரி காட்டன் புடவைகள்:- மதிப்புடைய காட்டன் ரகங்களில் கலம்காரி சாயமானது இடப்பட்டு அதில் அச்சுகளை புடவை முழுவதும் அல்லது புடவையின

கராரா டீல் பேசி கரெக்ட் பண்ண குரங்கு, ப்ப்பா... என வியக்கும் நெட்டிசன்கள்

Image
  குரங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்வது இயல்புதான். அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.  இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. மனிதன் குரங்கிலிருந்து  தோன்றினான் என கூறுகிறோம். அதைப் போலவே, இன்னும் நம்மில் பலரில் அதற்கான அடையாளங்கள் தெரியத்தான் செய்கின்றன. ஆனால், குரங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்வதும் இயல்புதான். அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.  ஒரு குழந்தையைப் போன்ற பழக்கவழக்கங்களுடன் காணப்படும் இந்த குரங்கின் அறிவாளித்தனத்தைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர்.  ஒரு குரங்கு ஒரு மனிதனின் கண்ணாடிகளை திருடி விடுகிறது. தனக்கு எதுவும் கிடைக்காமல் அந்த கண்ணாடியைத் திருப்பித் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறது. இந்த வேடிக்கையான வீடியோவை IPS அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  அவர் வீடியோவில், தலைப்பாக, "ஏக் ஹாத்

ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு ‘இவை’ அத்தியாவசியம்

Image
  ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மிகவும் முக்கியம். Nutrition for men's health:  ஒவ்வொருவரின் ஆரோக்கிய தேவையும் வித்தியாசமானது. ண்களை விட ஆண்களுக்கும் சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. இந்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல நோய்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்கின்றன. ஆண்களுக்கு அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என்ன, அவற்றின் பற்றாக்குறையால் அவர்களுக்கு என்ன நோய் வரலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படலாம். அவை: இருதய நோய் உயர் இரத்த அழுத்தம் எலும்புகள் பலவீனமடைதல் சோர்வு உடல் பருமன் தமனி வீக்கம் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஆண்களுக்கு மிகவும் தேவையான சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: வைட்டமின் டி  - வைட்டமின் டி எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்தக் குழாய்களின் வீக்கத்தைக் குறைக்கவும் மிகவும் அவசியம். ஆனால் ஆண்கள் மட்டுமல்ல பெரும்பாலான  பெரும்பாலான பெண்களுக்கு இது கிடைப்பதில்லை. ஏனென

பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

Image
  மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.  ஆண்களுக்கு, குறிப்பாக காற்று மாசுபாடு அதிகமாக உள்ள இடங்களில் வசிப்பர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வந்துள்ளது. காற்று மாசுபாடு உங்களுக்கு பல நோய்களைத் தருவது மட்டுமல்லாமல், விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கலாம் (Air Pollution Affects Fertility) என டதகவல்கள் வெளியாகியுள்ளது. மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் காற்று மாசுபாடு விந்தணுக்களின் எண்ணிக்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு ஒரு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மாசுபாசி நிறைந்த காற்று விந்தணுக்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என இதற்கு முன்பு கூட தகவல்கள் வெளியாகின. மாசுபட்ட காற்றை சுவாசிப்பது ஆண்களுக்கு ஆபத்தானது. இது ஆண்களின்  விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம். மன அழுத்தம் அதிகம் உள்ள சூழ்ந

இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் செய்யும் வினோத பெண்மணி

Image
  அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க, இந்த பெண் ஒரு விசித்திரமான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த பெண் இறந்தவர்களின் சாம்பலில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறார். அன்புக்குரியவர்களை இழப்பது மிகப் பெரிய சோகம். அதுவும்  தனிமையிலும், மறைந்தவர் மனதிற்கு பிடித்த விஷயங்களை பார்க்கும் போதும், இறந்தவர் ஆவலுடன் எதிர்பார்த்த குடும்ப நிகழ்வுகளின் போதும், நம் மனதை துன்பம் வாட்டி வதைக்கும். இவ்வாறு சோகத்தில் மூழ்கிய ஒரு பெண் செய்த செயல் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.  அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்க, இந்த பெண் ஒரு விசித்திரமான வழியை கண்டுபிடித்துள்ளார். இந்த பெண் இறந்தவர்களின் சாம்பலில் இருந்து நகைகளை தயாரித்து வருகிறார். இதனை பயன்படுத்தும் போது,  இறந்தவரது குடும்ப உறுப்பினர்கள் விசேஷ சந்தர்ப்பங்களில் தன்னுடன் இருப்பதை உணர முடியும் என அவர் கூறுகிறார்.  திருமணத்தின் போது தந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஒரு மணபெண் நினைத்தாள்.  தி சன் என்னும் பத்திரிக்கையில்  இந்த செய்தி வெளியாகியுள்ளது. ட்ரீ ஆஃப் ஹோப் என்ற வணிகத்தை நடத்தும் மெக், விசேஷ சந்தர்ப்பங்களில் அன்புக்குரியவர் இல்லாத குறையை போக்

கடலோரத்தில் அதிர்வலைகள்! சிதறிக் கிடக்கும் கடல் உயிரினங்களின் சடலங்கள்

Image
 கடற்கரையில் ஆயிரக்கணக்கான விலங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்கள் இறந்தன. கடற்கரையில் ஏராளமான கடல் வாழ் உயிரிணங்களின் சடலங்கள் கிடக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் காரணமாக அப்பகுதியில் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இங்கிலாந்தின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான கடல் உயிரினங்களின் சடலங்கள் கிடக்கின்றன. இந்த கடல் உயிரினங்களின் சடலங்கள் மார்ஸ்கே முதல் சால்ட்பர்ன் வரையிலானகடற்கரை பகுதியில் சிதறிக் கிடக்கின்றன என டெய்லி ஸ்டார் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகின்றது.   ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் எப்படி இறந்தன என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் மாசுபாடு தான் இதற்கு காரணம் என பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். மார்ஸ்கேயில் வசிக்கும் ஷரோன் பெல், என்பவர் இது குறித்து கூறுகையில் தினமும் கடற்கரைக்கு வருகிறேன் என்றும், கடந்த இரண்டு வாரங்களாக, கடற்கரையில் கடல்வாழ் உயிரினங்களின் சடலங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார். நான்

தங்கப் புதையலை கண்டுபிடித்த இந்தோனேசிய மீனவர்கள்...

Image
  கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள தங்கம், அரிய பொருட்கள் கொண்ட புதையலை இந்தோனேசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்! புதையல் என்றாலே அனைவருக்கும் ஆவல் வரும். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதையல், ஆச்சரியத்தை மட்டுமல்ல,  தங்கத் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதா? என்ற கேள்விகளையும் எழுப்புகிறது.  கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள தங்கம், அரிய பொருட்கள் கொண்ட புதையலை இந்தோனேசிய மீனவர்கள் கண்டுபிடித்தனர்!  இந்தப் பொக்கிஷத்தில் விலையே மதிப்பிட முடியாத கற்கள், தங்க மோதிரங்கள், நாணயங்கள் மற்றும் வெண்கல மணிகள் இருந்தன. மில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள நகைகளால் அலங்கரிக்கப்பட்ட  8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  புத்தரின் ஆளுயரச் சிலையும் இந்தப் புதையலில் உள்ளது. இவ்வளவு பெரிய புத்தர் சிலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதே இல்லை. தங்கப் பொக்கிஷங்களுக்குப் புகழ்பெற்ற இந்தோனேசியாவில் மீனவர்கள் விலை மதிப்புமிக்க புதையலை கண்டுபிடித்துள்ளனர்.  சுமத்ராவில் இந்த புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தங்கத் தீவு என்று அழைக்கப்படும் இந்தோனேசிய ராஜ்ஜியம் அளப்பறிய செல்வத்தை கொண்ட புதையலைக் கொண்டிருந்ததாகவும், அது, 700 ஆண்டுகளுக்கு மு

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டைனோசர்!

Image
  ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட முகமையானது பல ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்ட டைனோசரை வைத்து ஒரு கிராபிக்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளது. பல விதமான நன்மைகளை வெளியுலகிற்கு எடுத்துக்கூற நாடகங்கள்,பாடல்கள்,சுவரொட்டிகள் போன்றவை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்துவது வழக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கான நோக்கம் மக்களை எளிதாக சென்று சேரும். அதிலும் குறிப்பாக கிராபிக்ஸ் மூலம் முற்றிலும் அழிந்து விட்ட, அதாவது நம் தாத்தாவோட..தாத்தாவோட...தாத்தாவோட காலத்திலேயே அழிந்து போன உயிரினங்களை வைத்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டால் எப்படி இருக்கும்.  ஐ.நா.வின் வளர்ச்சித் திட்ட முகமையானது பல ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்துவிட்ட டைனோசரை வைத்து ஒரு கிராபிக்ஸ் வீடியோவை உருவாக்கியுள்ளது. இந்த வீடியோ வெளியிடப்பட்டதன் நோக்கமானது கால நிலை மாற்றம் சம்மந்தப்பட்ட விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதற்கு தான்.  இதில் ஐ.நா.சபையில் உலகத் தலைவர்கள் முன்பு ஒரு டைனோசர் வந்து பேசுவது போல வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.   அதாவது அந்த வீடியோவில் ஒரு டைனோசர் வந்த

விரைவில் உடல் எடையை குறைக்கும் பாங்க்ரா உடற்பயிற்சி

Image
  இசையை உணர்ந்து அதற்கேற்ப பாங்க்ரா நடன அசைவுகளை மேற்கொள்ளும் போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து எடை குறையும். நான்கு சுவர்களுக்குள் டம்பிள்ஸ் தூக்கியும், ட்ரெட்மில்லில் ஓடியும் மேற்கொள்ளும் வழக்கமான ஜிம் உடற்பயிற்சிகள் சலிப்பை தருகிறதா? கவலை வேண்டாம். இரு கைகளை உயர்த்தி பலே பலே போன்று நடனமாடும் பஞ்சாப் மாநிலத்தவரின் பாங்க்ரா நடனக்கலையிலிருந்து உருவாகியுள்ளது புதுமையான உடற்பயிற்சி. பாங்க்ரா என்பது பலருக்கும் பிடித்தமான நடன முறையாகும். பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் விரிவான சித்தரிப்பால் பலே பலே என்ற துள்ளல் இசை கேட்டாலே அனிச்சையாக கைகள் பாங்க்ராவின் அடையாளமான நடன அசைவினை செய்யத்தொடங்கிவிடும். மனதுக்கு ஆனந்தத்தையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகிறது பாங்க்ரா முக்கியமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. பாங்க்ராவை நடனமாக மட்டுமின்றி உடற்பயிற்சியாகவும் மேற்கொண்டு பயனடையலாம். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிட்னஸ் பயிற்சியாளர் சரின் ஜெயின் என்பவரால் 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைதான் மசாலா பாங்க்ரா. பஞ்சாபிகளின் பலே பலே நடன அசைவுகளில் சிறுசிறுமாற்றங்கள

பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்

Image
  புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. பூமியை  புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:- வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் அதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவ முனையின் கீழ் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனி, செக்குடியரசு, போலாந்து, உக்ரைன், ரஷியா, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பகுதிகள் உள்ளன. புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. மேலும் விண்கலத்திலும் சில தாக்கங்கள் ஏற்படலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALSO

அப்படியே அணியலாம்...ஆயத்தப் புடவைகள்

Image
  திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான். ஆயத்த ஆடைகள் (ரெடிமேட்) போல புடவைகளிலும் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது புதுவரவாக உள்ளது. அதிலும், திருமணம், வரவேற்பு மற்றும் பார்ட்டிகளுக்கும் அணிந்து செல்வது போல் பல்வேறு டிசைன்களில் ரெடிமேட் புடவைகள் வந்திருப்பது உண்மையிலேயே புதுவரவுதான். மற்ற ஆயத்த ஆடைகளைப் போலவே இவ்வகை ஆயத்தப் புடவைகளும் தைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சில நொடிகளிலேயே இவற்றை உடுத்திக் கொள்ளும் விதத்தில் தைத்து தயார் நிலையில் இருப்பவை இவ்வகைச் சேலைகள். மேலே இடுப்புப் பட்டையில் அட்ஜஸ்ட் செய்து அணிவது போல் கொக்கியானது கொடுக்கப்பட்டு புடவையின் கீழ்ப்புறம் ஃபிரில்களுடன், தோள்பட்டையில் அமரும் ஃபீளீட்டுகள் கூட அப்படியே அணிந்து கொள்வது போல் ரெடிமேடாக வரும் புடவைகளுக்கு ஏற்றார் போன்ற தைக்கப்பட்ட சோளிகள் பல்வேறு டிசைன்களில் அட்டகாசமாக வருகின்றன. நீளமான பாவாடையின் கீழ்ப்புறம் அழகிய ஃபிரில்களானது அதிக சுருக்கங்களுடன் தைக்கப்பட்டு தனியாக உள்ளது. அதற்கு

பப்பாளியும், மருத்துவ பயன்களும்...

Image
  சுவையிலும், சத்து மிகுதியிலும் பப்பாளிப் பழத்திற்கு தனி இடம் உண்டு. எளிதில் ஜீரணமாகும், மருத்துவ குணம் மிகுந்தது என்பதால் பழப் பிரியர்களிடம் பப்பாளிக்கு மிகுந்த வரவேற்பு காணப்படும். இதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்வோம்... பப்பாளியின் அறிவியல் பெயர் ‘காரிகா பப்பாயா’. அதிகபட்சம் 20 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும் விளையக் கூடியது. மிகக் குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. பப்பாளியில் கொழுப்புச்சத்து கிடையாது என்பது கவனிக்கத்தக்கது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் ஏராளம் உள்ளன. புதிதாக பறிக்கப்பட்ட 100 கிராம் பழத்தில் 61.8 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ உள்ளது. இது ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் கிடைப்பதைவிட அதிக அளவு என்பது குறிப்பிடத்தக்கது. உடலுக்கு தீங்கு தரும் நோய் காரணிகளை விரட்டுவதிலும், நோய்த்தடுப்பு மண்டலத்தை புத்துணர்ச்சியாக வைப்பதிலும் ‘வைட்டமின் சி’ பங்கெடுக்கிறது. அதேபோல பப்பாளிப் பழத்தில் ‘வைட்டமின் ஏ’, மிகுதியான அளவில் உள்ளது. பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின், கிரிப்டோசாந்தின் போன்ற புளோவனாய்டுகளும் இதிலுள்ளது. தோல் பளபளப்புத் தன்மையுடன் இருக்கவும், பார்வைத் திறனுக்கும்

அழகும், ஆபத்தும் நிறைந்த ‘யெல்லோஸ்டோன் பூங்கா’

Image
  அமெரிக்காவின் பார்க் கவுண்டி வ்யோமிங் பகுதியில் இருக்கிறது, யெல்லோஸ்டோன் உயிரியல் பூங்கா. உலகின் முதல் தேசிய பூங்காவான இது 1872 மார்ச் 1-ந் தேதி உருவாக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 8987 சதுர கிலோ மீட்டர்கள். ஐந்து நுழைவுவாயில்களைக் கொண்டது. 466 கிலோ மீட்டர்கள் சாலை வழியாகப் பூங்காவில் பயணிக்க முடியும். 5 சதவிகிதம் நீராலும், 15 சதவிகிதம் புல்வெளிகளாலும் சூழப்பட்டுள்ள இந்த பூங்கா 80 சதவிகிதம் அடர்ந்த காடுகளை உள்ளடக்கியது. இந்தப்பூங்காவில் 15 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே நடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உலக சுற்றுலாப் பயணிகளின் முதல் விருப்பமாக இருக்கும் இந்த யெல்லோஸ்டோன், இயற்கையாக எவ்வளவு அழகைக் கொண்டிருக்கிறதோ அவ்வளவு ஆபத்தையும் கொண்டிருக்கிறது. பூங்காவில் இருக்கிற ஒவ்வொன்றும் அழகு, அந்த ஒவ்வொன்றும் ஆபத்து..! யெல்லோஸ்டோன் பூங்காவில் 340 அருவிகள் இருக்கின்றன. 300 வெப்ப நீரூற்றுகள் உள்ளன. எல்லாமே ஆபத்தானதுதான். இங்கிருக்கும் ஓல்ட் பெய்த்புல் (OLD FAITHFUL) என்கிற வெப்ப நீரூற்று ஒவ்வொரு முறையும் சுமார் 32 ஆயிரம் லிட்டர் வெப்ப நீரை 180 அடிக்கு மேல் கொப்பளிக்கிறது. ஆரம்ப காலங்களி

நேக் சந்தின் பாறைப் பூங்கா

Image
  அரியானாவின் தலைநகர் சண்டிகரில் அமைந்திருக்கிறது நேக் சந்த் பாறைப் பூங்கா. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் வீணாகத் தூக்கி எறியப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. உடைந்த பீங்கான் கோப்பைகள், தட்டுகள், மின்சார உதிரி பாகங்கள், குழல் விளக்குகள், மிதி வண்டியின் பாகங்கள், பாட்டில்கள், பானைகள், குழாய்கள், கண்ணாடி வளையல்கள், மொசைக் கற்கள் என்று குப்பையில் எறியப்பட்ட பொருட்களைச் சேகரித்து, கலை நயத்துடன் உருவங்களை இங்கே படைத்திருக்கிறார்கள். இந்த அழகிய பாறைப் பூங்கா நேக் சந்த் சைனி என்ற தனி மனிதரால் உருவாக்கப்பட்டது என்பதை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது. சுமார் 13 ஆண்டுகளாக தனி மனிதராக கோட்டைகள், நீர்வீழ்ச்சி, பஞ்சாப் கிராமத்தின் வளைந்து செல்லும் பாதைகள், அரண்மனை, மனிதர்கள், விலங்குகள் என்று உருவாக்கியிருந்தார். நேக் சந்தின் இந்தப் படைப்பாற்றலுக்குக் காரணம் என்ன தெரியுமா? அவரது அம்மா கூறிய ராஜா, ராணி கதைகள், தேவதைக் கதைகள், மந்திரவாதி கதைகள்தான். கதைகளைக் கேட்கும்போது அவற்றைக் காட்சிகளாகக் கற்பனை செய்துகொள்வார். இதனால் அவரது கற்பனைத் திறனும்

அமேசான் அதிபரின் விண்வெளி நிலையம்

Image
அடுத்த 10 ஆண்டுகளில், சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வு பெற்றுவிடும். ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியான அந்த ஆய்வு நிலையம் விட்டுச் செல்லும் இடத்தைப் பிடிக்க, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் திட்டமிடுகிறார். வரும் 2030க்குள் அவரது புளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனம், ஆர்பிட்டல் ரீப் என்ற வர்த்தக விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவிவிடும் என்று அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு, போயிங் உட்பட பல பெரிய தொழில்நிறுவனங்கள் ஆதரவு தரப்போவதாக பெசோஸ் அண்மையில் அறிவித்தார். ஆர்பிட்டல் ரீப் பல பயன்கள் கொண்டதாக இருக்கும். அது ஒரு தொழிற் பூங்காவாகவும், ஆய்வகமாகவும், நிலா, செவ்வாய் போன்ற கோள்களுக்கு போக விரும்பும் விண்வெளி வீரர்களுக்கான தங்குமிடமாகவும் இருக்கும். இந்த மையம் செயல்பட துவங்கியதும் விண்வெளியில் ஒரு சுறுசுறுப்பான பொருளாதாரமே உருவாகிவிடும் என்கிறார் பெசோஸ். அவர் சொன்னால், அதைச் செய்யக்கூடியவர் தான். Also read :  இன்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இன்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

Image
WhatsApp பயன்படுத்தாதவர்களே தற்போது இல்லை என கூறும் அளவிற்கு அனைவரும் WhatsApp பயனராக உள்ளனர். இந்நிலையில் இன்டர்நெட் வசதி இல்லாமல் WhatsApp பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. Chatsim: இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் மக்களும் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து வருகின்றனர். ஒரு நாள் முழுவதும் மொபைல் போன் மற்றும் மொபைல் போன் இல்லாமல் வாழ்வது பெரிய சாதனையாக கருதப்பட்டு வருகிறது. உணவு இல்லாமல் கூட இருக்க முடியும் மொபைல் போனும் இன்டர்நெட்டும் இல்லாமல் இருப்பது முடியாத ஒன்று என பலரும் கருதி வருகின்றனர். அந்த அளவிற்கு இணையத்தில் மனிதர்கள் மூழ்கியுள்ளனர். இணையம் மூலம் நமக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இணையதளம் மற்றும் மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும் WhatsApp பயனராகவே இருப்பார்கள். உலகம் முழுவதும் தனக்கென பயனர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வரும் நிறுவனம் WhatsApp. இந்த நிறுவனம் தங்களது பயனர்களுக்கென அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. தகவல் பாதுகாப்பில் சிறந்து

ஒரே செடியில் கத்தரிக்காய், தக்காளி

Image
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத் தின் வேளாண் விஞ்ஞானிகள் கலப்பின முறையில் ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வளர்த்து புதிய சாதனை செய்துள்ளனர். கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயரான ‘பிரிஞ்சால்’, தக்காளியின் ஆங்கிலப் பெயரான ‘டொமாட்டோ’ ஆகியவற்றை இணைத்து இந்தச் செடிக்கு ‘பிரிமாட்டோ’ என்று பெயர் வைத்துள்ளனர். ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டு அல்லது வேரில் இணைத்து வளர்க்கப்படும் முறையில் இந்தப் புதிய கலப்பின செடி வளர்க்கப்பட்டுள்ளது. 25 முதல் 30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள், 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு கட்டுப்படுத்தப் பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்த்து பின்னர் மேலும் ஒரு வாரம் நிழலில் வளர்த்து அதன் பிறகு நிலத்தில் பயிரிடப்படுகிறது. இதுபோல் நகரங்களில் சிறிய இடத்தில் கூட வளர்க்க லாம். ஒவ்வொரு செடியும் 2.3 கிலோ தக்காளி, 2.6 கிலோ கத்தரிக்காய் விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக் கின்றனர். Also read :  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..!!

1000 கி.மீ அப்பால் இருந்து உணவு ஆர்டர் செய்த நபர்... டெலிவரி பாய் செய்த செயலை பாருங்கள்

Image
இந்த உணவை டெலிவரி செய்வதால் அவருக்கு கிடைப்பது வெறும் $9.25 (ரூ.694) மட்டுமே என்பது தான் மிகப் பெரிய வேதனை. இன்றைய நவீன உலகில் ஏராளமான தொழிற்நுட்ப வளர்ச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் பல நமது அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு முக்கியமானதாக மாறிவிட்டது. அந்த வகையில் உணவு டெலிவரி செய்யப்படும் செயலிகளும், பெரிய அளவில் நம் வாழ்வில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பெருநகரங்களில் காலை, மதியம், மாலை, இரவு என எல்லா வேளையிலும் உணவை ஆர்டர் செய்தே சாப்பிடும் பழக்கம் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இப்படி ஆர்டர் செய்கையில் சரியான நேரத்தில் வரவில்லை என்றால், அந்த டெலிவரி செய்யும் நபர் மீது மிக கடுமையான கோபத்தை தெரிவிக்கவும் செய்கிறோம். நகர் புறங்களில் உள்ள போக்குவரத்து நெரிச்சல் போன்றவற்றை நாம் கணக்கில் கொள்வதே இல்லை. 10-15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஆர்டர் செய்த உணவு தாமதாக வந்தாலே இப்படி என்றால், 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து ஒருவர் ஆர்டர் செய்த உணவை அந்த டெலிவரி செய்யும் நபர் எப்படி கையாள்வார் என்பதை யோசித்து பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு ச

தாய்ப்பால் வங்கி’ பற்றி தெரியுமா உங்களுக்கு? எவ்வாறு செயல்படுகிறது? நிச்சயம் அறிய வேண்டியவை!-

Image
பால் தானம் செய்ய வரும் பெண்களிடம் இருந்து பால் சேகரிக்கும் முன்பு அவர்களை நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே பால் வங்கிகளுக்கு அனுப்படுகின்றனர். தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்குமான ஒரு உறவுப்பாலம் என்றே சொல்லலாம். அது, குழந்தைகளுக்கான முதல் தடுப்பு மருந்து; குழந்தைகளுக்கான ஓர் தன்னிகரற்ற உணவும் கூட. உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாய்ப்பாலின் முக்கியத்துவம், உன்னதம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும் உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரத்தை கடைப்பிடிக்கிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது தாயின் முழுமுதல் கடமை. இது 22 சதவீத பிரசவத்துக்குப் பிந்தைய குழந்தை இறப்புகளை தடுக்கும் என்பது ஒரு ஆய்வின் தகவல் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முழுமையாக ஒரு வருடத்திற்கு தாய் தனது குழந்தைக்கு பாலூட்ட வேண்டும். இரத்த தானம் போலவே தாய்ப்பாலையும் தானமாக முன்வந்து அளிக்கும் பெண்கள் பற்றியும், ‘ஹியூமன் மில்க் பேங்க

நல்ல மூவீ பாக்கணும் OTT சபஸ்க்ரிப்ஷன் இல்லையா, இதை செய்ங்க, இலவசமாக கிடைக்கும்

Image
இந்திய சந்தையில், குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இன்டர்நெட் மக்களுக்கு பொழுதுபோக்கு என்ற அர்த்தத்தை மாற்றியுள்ளது.  இப்போதெல்லாம், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது, அதை நாம் திரைப்படம் போன்றவற்றுக்குப் பயன்படுத்துகிறோம். இப்போது ஆண்ட்ராய்டு டிவியும் மிகவும் குறைந்த விலையில் வருகிறது. இந்த நாட்களில் டிவி பார்ப்பதற்கான செயற்கைக்கோள் இணைப்பு சார்பு முடிந்துவிட்டது மற்றும் பல OTT இயங்குதளங்களில் நிறைய உள்ளடக்கம் கிடைக்கிறது. இருப்பினும், OTT இயங்குதளங்களுக்கான சந்தாக்கள் மிகவும் விலை உயர்ந்தவை. இத்தகைய சூழ்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் சில ரீசார்ஜ் திட்டங்களுடன் வெவ்வேறு OTT இயங்குதளங்களுக்கு இலவச அணுகலை வழங்குகின்றன. நீங்கள் இலவச OTT இயங்குதளத்திற்கான சந்தாவையும் தேடுகிறீர்களானால், ஏர்டெல், வி மற்றும் ஜியோவின் இந்தத் திட்டங்களைப் பற்றி நீங்கள் பார்க்கலாம். ஜியோ சலுகை என்ன ஜியோவின் எந்த ரீசார்ஜிலும் ஜியோ சினிமா அணுகல் இலவசமாகக் கிடைக்கும். ஜியோ சினிமா என்பது உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய ஒரு பயன்பாடாகும்

வயதான தோற்றத்தை அகற்றி முகச்சுருக்கத்தை குறைக்கும் இந்த மேஜிக் ஆயிலை மிகவும் எளிமையாக வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்

Image
அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசைஇருக்காதது. இன்றைய காலகட்டத்தில் நமது தோற்றத்திற்கு தான் முதல் மதிப்பு கொடுக்கின்றனர். அவ்வாறு நமது அழகும் சரி, உடையும் சரி மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும்.  ஒரு சிலருக்கு சிறு வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்படும். இதனால் பார்ப்பதற்கு வயதான தோற்றத்தில் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் வேலை பளு, மன குழப்பம், மனக்கவலை போன்றவைகளாகும். சருமத்திற்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதால் தான் இவ்வாறான தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இவற்றை அகற்ற இந்த ஆன்ட்டி ஏஜிங் ஆயிலை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: ஆலிவ் ஆயில் – 100 கிராம்,  ஆளி விதை – 3 ஸ்பூன்,  ஆரஞ்சு பழத்தோல் – 1. செய்முறை: நமது வீட்டில் சாப்பிட பயன்படுத்தும் ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் காயவைத்து அவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இதனை செய்ய முடியவில்லை என்றால் நாட்டு மருந்து கடையில் ஆரஞ்சு பழ தோல் பவுடர் என்று கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டு

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..!!

Image
  உணவு பழக்கத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை மறுக்க இயலாது. எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் சில தவறான உணவு பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.  குளிர்காலத்தில் நோய்கள் வராமல் இருக்க, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பது மிகவும் அவசியம். இதன் மூலம், காய்ச்சல் மற்றும் பல வகையான தொற்றுநோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்பட, முதலில் நீங்கள் காலை உணவில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். சில சமயங்களில் உங்கள் காலை உணவு பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், எனவே,  காலை உணவில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். ஆரஞ்சு சாறு   கூடுதல் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நீங்கள் காலை உணவில் ஆரஞ்சு சாறு குடிக்க வேண்டாம் என்பது தவறான முடிவு. ஆரஞ்சு சாறு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. எனவே காலை உணவில் கட்டாயம் ஆரஞ்சு ஜூஸ் இருக்க வேண்டும். சர்க்கரை உள்ள உணவு பொருட்கள் காலை உ

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!