நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் கெனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

 54 வயதான அனிதா ஆனந்த், நீண்டகாலமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.


டொராண்டோ:

 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய அரசியல்வாதியான அனிதா ஆனந்த், நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக செவ்வாயன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது அவரது நியமனம் நடந்தது. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி திடீர் தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு திரும்பியுள்ள நிலையில், இராணுவ சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த நியமனம் நடந்துள்ளது.

54 வயதான அனிதா ஆனந்த், நீண்டகாலமாக பாதுகாப்பு அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ பாலியல் துஷ்பிரயோக நெருக்கடியை ஹர்ஜித் சஜ்ஜன் கையாண்ட முறை விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச மேம்பாட்டு முகமை அமைச்சராக சஜ்ஜன் நியமிக்கப்பட்டுள்ளார் என நேஷனல் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சரவையில் பாலின சமநிலை உள்ளது என்றும், இது 38 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது என்றும், தேர்தலுக்கு முன்னர் இருந்த எண்ணிகையை விட தற்போது ஒரு நபர் அதிகமாக உள்ளார் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குளோபல் நியூஸின் அறிக்கையின்படி, பல வாரங்களாக பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் மத்தியில் அனிதா ஆனந்த் ஒரு வலுவான போட்டியாளராகப் பேசப்பட்டு வந்தார். இந்த பதவியில் அவரை நியமித்தால், அது, இராணுவ பாலியல் துஷ்பிரயோகத்தில் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பும் என்றும், அரசாங்கம் முக்கிய சீர்திருத்தங்களை செய்ய தயாராக இருக்கிறது என்ற உறுதியை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் கருதினர்.

கனேடிய (Canada) இராணுவம் தனது வழக்கத்தை மாற்றுவதற்கும், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளைத் தடுப்பதற்கும் சிறந்த அமைப்புகளை உருவாக்குவதற்கு கடுமையான பொது மற்றும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அனிதா ஆனந்த் ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞராக ஒரு வலுவான பின்னணியைக் கொண்டவர் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.

கலைக்கப்பட்ட அமைச்சரவையில் அனிதா ஆனந்த், சஜ்ஜன் மற்றும் பர்திஷ் சாக்கர் ஆகிய மூன்று இந்திய-கனடிய அமைச்சர்கள், கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

ஓக்வில்லில் அனிதா ஆனந்த் கிட்டத்தட்ட 46 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கனடாவின் தடுப்பூசி (Vaccination) அமைச்சருக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கருதப்படுகின்றது.

அவர் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஓக்வில்லியை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். COVID-19 தொற்றுநோய் முழுவதும் கொள்முதல் அமைச்சராக பணியாற்றினார். கொரோனா தொற்றுநோய் சமயத்தில் அவர் ஆற்றிய பங்கு வெகுவாக பேசப்பட்டது.


ALSO READ : ஆன்லைன் வகுப்பில் போன் வெடித்து சிறுவன் உயிரிழப்பு - வியட்நாமில் நிகழ்ந்த சோகம்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!