நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிக்காசோவின் படைப்புகள் 800 கோடிக்கு விற்பனை...!

 புகழ்பெற்ற ஸ்பானிஷ் கலைஞரான பிக்காசோவின் படைப்புகள் சுமார் 800 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.


லாஸ் வேகாஸ்,

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பெல்லாஜியோ கேலரி ஆஃப் ஃபைன் ஆர்ட்டில் உள்ள பிக்காசோ உணவகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த பிக்காசோவின் ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் துண்டுகளை அதன் உரிமையாளர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் விற்க முடிவு செய்தார்.

புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபி  லாஸ் வேகாசில் இந்த ஏலத்தை நடத்தியது. நேற்று முன்தினம் இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் 1938-ம் ஆண்டு வரையப்பட்ட பிக்காசோவின் காதலியான மேரி தெரேஸ் வால்டரின் உருவப்படம்  மட்டும் சுமார் 550 கோடிக்கு ($ 40.5 மில்லியன்) விற்கப்பட்டதாக ஏல அதிகாரிகள் தெரிவித்தனர். 

மொத்தமாக ஒன்பது ஓவியங்கள் மற்றும் இரண்டு பீங்கான் துண்டு என அவரது 11 கலைப்படைப்புகள் சுமார் 800 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இன்று பிக்காசோவின் 140 வது பிறந்தநாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!