நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

33 வருடங்களாக பாம்பு விஷத்தை உடலுக்குள் செலுத்தும் நபர்! காரணம் என்ன தெரியுமா?

 பாம்பைக் கண்டால் அலறி ஓடும் மக்களுக்கு மத்தியில் அதன் விஷத்தை 33 வருடங்களாக தனது உடலுக்குள் ஊசிமூலம் நபர் செலுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஸ்டீவ் லுட்வின்(55). இவர் பாம்புகளின் விஷத்தினை ஊசியால் தன் மூட்டுகளில் செலுத்துவதை பொழுதுபோக்காக வைத்திருக்கின்றார்.  


அதாவது உலகின் ஏழை நாடுகளில் மக்கள் பாம்பு கடி பிரச்சினையால் அதிகமாக உயிரிழந்து வரும் நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்க கடந்த 33 வருடங்களாக இவ்வாறு செய்து வருகின்றாராம்.

பத்து நாட்களுக்கு ஒருமுறை தனது உடலுக்குள் செலுத்திவரும் இவர் பல விஷப்பாம்புகளை தனது வீட்டின் அலை ஒன்றில் வைத்திருக்கிறார்.

லண்டனில் தனது படிப்பினை முடித்துவிட்டு மிருகக்காட்சி சாலைகளில் விலங்குகள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து இவ்வாறு செய்வதற்கு இவருக்கு ஆர்வம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. 



ALSO READ : 14 நிமிடங்களில் 25 நண்டுகளை சாப்பிட்ட நபர்: பரபரப்பான போட்டி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!