நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தீபாவளி லேகியம் செய்வது எப்படி? இப்படித்தான்…

 தீபாவளி பலகாரம் செய்வது போலவே, செரிமாணத்தை சரி செய்யும் தீபாவளி லேகியமும் செய்யும் வழக்கம் உண்டு.


தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கொண்டாட்டமும், திண்பண்டங்களும் தான். பலகாரங்களை ரசித்து ருசித்து உண்டு, தீபாவளியை கொண்டாடினாலும், அதன் பின் இணைப்பாக அஜீரணக் கோளாறும் ஏற்படும். எனவே, தீபாவளி பலகாரம் செய்வது போலவே, செரிமாணத்தை சரி செய்யும் தீபாவளி லேகியமும் செய்யும் வழக்கம் தமிழகத்தில் உண்டு.

வயிறு கோளாறுகளை சரி செய்ய உதவும் தீபாவளி லேகியம், மழைக்காலத்தில் ஏற்படும் மழைத்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவும், ஐப்பசியில் அடைமழை பெய்யும் என்பதால், தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கவும் இந்த வீட்டு மருந்து உதவும். வீட்டில் உள்ள  மசாலாக்களை பயன்படுத்தி இந்த லேகியம் தயாரிக்கப்படுகிறது. தீபாவளி மருந்து என்றும் அழைக்கப்படும் தீபாவளி லேகியத்தை தயார் செய்வதும் சுலபம் தான்…


தேவையான பொருட்கள்: 


கண்டந்திப்பிலி 50  கிராம்

அரிசி திப்பிலி 20 கிராம்

ஜாதிக்காய்  1

ஜாதிபத்திரி 8 இதழ்

சித்தரத்தை 50 கிராம்

விரலி மஞ்சள் 10 

சுக்கு 100 கிராம்

அதிமதுரம் 20 கிராம்

ஒமம் 100 கிராம் 

லவங்கம் 6

ஏலக்காய் 6

தனியா 25 கிராம்

மிளகு 50 கிராம்

சீரகம் 50 கிராம்

வெல்லம் 400 கிராம்

நெய் 250 கிராம்

நல்லெண்ணை 250 கிராம்

தேன் 100 கிராம்



கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, சித்தரத்தை, விரலி மஞ்சள், சுக்கு,

அதிமதுரம் ஆகியவற்றை நன்கு பொடி செய்து வைக்கவும். பொடி செய்த மசாலாக் கலவையை எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒமம், லவங்கம், ஏலக்காய், தனியா, மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும். பிறகு வறுத்து வைத்துள்ள அனைத்தையும் அரைக்கவும். நன்றாக சலித்துக்கொண்டு மாவாக உள்ள மசாலாக்களை தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் 

அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து போட்டு, மூழ்கும் வரை தண்ணி ஊற்றி கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு வெல்லத்தை பாகாக காய்ச்சவும். பிறகு நல்லெண்ணை, நெய் இரண்டிலும் பாதியளவை ஊற்றி, அதில் மசாலாக் கரைசலையும் சேர்த்து வேகவிடவும்.

கட்டி தட்டாமல் வேகவிட்டு,  மீதமுள்ள நெய் மற்றும் நல்லெண்ணையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். ஒரு கட்டத்தில் நெய்யும், எண்ணையும் கரைசலில் இருந்து பிரிந்து வரும். அப்போது அந்தக் கலவை கெட்டியாக அல்வா பதத்திற்கு வந்துவிடும். அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி, அதில் தேனை சேர்த்து கிளறிவிடவும்.  தீபாவளி மருந்து தயார்…


ALSO READ : இந்த ஒரே ஒரு சாதம் தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்குமாம்! வெறும் 10 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!