நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Benefits Of Rice: அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா

 அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


அரிசி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று பலர் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அது ஒரு தவறான கருத்து. அரிசியை முற்றிலுமாக தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல என்று சமீபத்தில் ஒரு ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

சுவையான உணவு மற்றும் நமக்கு மிகவும் பழக்கமான உணவு என்பதை கடந்து அரிசியில் (Rice) பல்வேறு சத்துக்கள் உள்ளன. பல விதமான நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன. எனவே அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.


* அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.


* அரிசியை எல்லா விதமான காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் இறைச்சிகளுடன் சேர்த்து சுவையாக சமைக்கலாம். காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.


* அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும். 


* அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. 


* முடி உதிர்தல் புகார் இருந்தால் கண்டிப்பாக அரிசி சாப்பிட வேண்டும். ஏனெனில் இது முடியை பராமரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.


ALSO READ : குளிர்காலத்தில் உங்களை healthy ஆக வைக்கும் உணவுகள் இதோ

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!