நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அமேசான் அதிபரின் விண்வெளி நிலையம்

அடுத்த 10 ஆண்டுகளில், சர்வதேச விண்வெளி நிலையம் ஓய்வு பெற்றுவிடும். ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியான அந்த ஆய்வு நிலையம் விட்டுச் செல்லும் இடத்தைப் பிடிக்க, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் திட்டமிடுகிறார்.

வரும் 2030க்குள் அவரது புளூ ஆரிஜின் என்ற விண்வெளி நிறுவனம், ஆர்பிட்டல் ரீப் என்ற வர்த்தக விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவிவிடும் என்று அறிவித்துள்ளது. இந்த முயற்சிக்கு, போயிங் உட்பட பல பெரிய தொழில்நிறுவனங்கள் ஆதரவு தரப்போவதாக பெசோஸ் அண்மையில் அறிவித்தார்.
ஆர்பிட்டல் ரீப் பல பயன்கள் கொண்டதாக இருக்கும். அது ஒரு தொழிற் பூங்காவாகவும், ஆய்வகமாகவும், நிலா, செவ்வாய் போன்ற கோள்களுக்கு போக விரும்பும் விண்வெளி வீரர்களுக்கான தங்குமிடமாகவும் இருக்கும்.

இந்த மையம் செயல்பட துவங்கியதும் விண்வெளியில் ஒரு சுறுசுறுப்பான பொருளாதாரமே உருவாகிவிடும் என்கிறார் பெசோஸ். அவர் சொன்னால், அதைச் செய்யக்கூடியவர் தான்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!