நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகிலேயே மிகப் பழமையான Pyramid ரகசியத்தை சீனா மறைப்பது ஏன்?

 உலகிடம் இருந்து பல விஷயங்களை மறைத்து வரும் சீனா மர்மமாய் பாதுகாக்கும் பிரம்மாண்ட ரகசியம்...  


உலகமே அறியாத மர்மமான பிரமிடுகள் சீனாவில் உள்ளன. இந்த மர்ம பிரமிடுகளை பாதுகாப்பது சீன ராணுவம் தான். இந்த பிரமிடுகளில்  சீனாவின் வரலாற்றுடன் தொடர்புடைய ரகசியங்கள் மறைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது, 


இந்த பிரமிடுகள் சீனாவின் சியான் நகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. பிரமிட் வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மர்மம் இன்று வரை வெளிவரவில்லை. 


சீனா பல நூற்றாண்டுகளாக பிரமிடுகளின் ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது. 1912 ஆம் ஆண்டு, ஃபிரெட் மேயர் ஷ்ரோடர் என்ற அமெரிக்க தொழிலதிபர் அங்கு வந்தபோது தான் இந்த பிரமிடுகள் பற்றிய தகவல்கள் உலகிற்கு கிடைத்தன.


சீனாவில் 8,000 ஆண்டுகள் பழமையான பிரமிடு உள்ளதாக அமெரிக்க தொழிலதிபர் தனது டைரியில் குறிப்பிட்டுள்ளார். 1000 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பிரமிடுகளும் சீனாவில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகு, அமெரிக்க விமானப்படை விமானி ஜேம்ஸ் கோஸ்மேன் இந்த பிரமிட்டைப் பார்த்தார். இது எகிப்தின் பெரிய பிரமிட்டை விட உயரமானது என்றும், அதன் மேல் படிகம் போன்ற ஒரு கல் இருப்பதாகவும் கூறினார்.


90 களில் இந்த பிரமிடுகளைக் கண்டுபிடிக்க முயன்றார் ஜேர்மன் புலனாய்வாளர் ஹார்ட்விக் ஹவுஸ்டோர்ஃப். ஆனால் அவருடைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பிரமிடுகளை சீன ராணுவம் பாதுகாப்பதாக தகவல் கிடைத்தது. 8000 ஆண்டுகள் பழமையான இந்த பிரமிடுகளில் மரங்களும் புல்லும் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசக் குடும்பத்தினரின் சடலங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களும் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம். அதனால் தான், இந்த பிரமிடுகளுக்கு உயர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்!




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!