நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நவம்பர் 11 அன்று சர்வதேச அளவில் PUBG அறிமுகம்

 பப்ஜி ரசிகர்களுக்கு  பிடித்தமான விளையாட்டுகளை தொடர்ந்து உருவாக்கவிருப்பதாக கிராஃப்டன் தலைமை நிர்வாக அதிகாரி சிஎச் கிம் தெரிவித்தார்.


PUBG இன் ரசிகர்களுக்கு நல்ல செய்தி, இந்த வேடிக்கையான விளையாட்டு நவம்பர் 11 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீண்ட காலமாக PUBG (PlayerUnknown's Battlegrounds) விளையாட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களின் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வரவிருக்கிறது. தென் கொரிய கேம் டெவலப்பர் நிறுவனமான கிராஃப்டன் (South Korean game developer company Krafton), வரவிருக்கும் கேம் PUBG: New State நவம்பர் 11 அன்று உலகளவில் தொடங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த கேம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகள் இரண்டிலும் ஒரே நேரத்தில் தொடங்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள பப்ஜி ரசிகர்களுக்கு  பிடித்தமான விளையாட்டுகளை கிராஃப்டன் தொடர்ந்து உருவாக்கும் என்று கிராஃப்டன் தலைமை நிர்வாக அதிகாரி சிஎச் கிம் (Crafton CEO CH Kim) கூறினார். PUBG: நியூ ஸ்டேட் (PUBG: New State) விளையாட்டு, ஆண்ட்ராய்ட் மற்றும் iOS இல் 50 மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

2021, பிப்ரவரி மாதம் முன் பதிவு தொடங்கியது. பப்ஜியின் இந்திய நிறுவனம், இந்திய கேமிங், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் ஐடி என்டர்டெயின்மென்ட் (Indian gaming, e-sports and IT entertainment industry) துறையின் வளர்ச்சியில் அதிக முதலீடு செய்வதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

PUBG முன் பதிவு செய்வது எப்படி (How to do PUBG) என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். பப்ஜியின் New State விளையாட்டிற்கு முன் பதிவு செய்வதற்கு, முதலில் Android மற்றும் iOSக்கான முன் பதிவு இணைப்பைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, நீங்கள் தொடர்புடைய ஆப் ஸ்டோருக்குத் திருப்பி விடப்படுவீர்கள்.

இப்போது கூகுள் ப்ளேவில் முன்பதிவு விருப்பத்தை அல்லது ஆப் ஸ்டோரில் முன்கூட்டிய ஆர்டர் விருப்பத்தை கிளிக் செய்யவும். இந்த கேம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும்போது பதிவிறக்கம் செய்வதற்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

பல நபர்கள் ஒரே சமயத்தில் விளையாடும் பேட்டில் கிரவுண்ட் எனப்படும் சுடுதல் விளையாட்டு வகையைச் சேர்ந்த பப்ஜி விளையாட்டில், ஆகும். ஒரே சமயத்தில் அதிகபட்சமாக நூறு நபர்கள் விளையாடலாம். விளையாடத் துவங்கும் முன் தனியாக விளையாடுவது, இருவராக விளையாடுவது அல்லது குழுவாக விளையாடுவது என்பதை ஒருவர் முடிவு செய்துக் கொள்ளலாம்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு, 2020 செப்டம்பர் இரண்டாம் தேதியன்று பப்ஜிக்கு தடைவிதிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ், பப்ஜி உட்பட மொத்தம் 118 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக, இந்திய அரசு அறிவித்தது.  



ALSO READ : ராஜ நாகத்தை பற்றி சில சுவாரஸ்யமான உண்மை தகவல்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!