நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பேஸ்புக் வலைத்தளத்தின் புதிய பெயரை வெளியிட்ட மார்க் - என்ன தெரியுமா?

 சமூக வலைத்தளத்தின் முன்னணி நிறுவனமான பேஸ்புக் கடந்த சில நாட்களாகவே தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்து வந்தது.



இதனால், பயனளார்களின் கடும் அதிருப்தியால், பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக்கின் பெயரை மாற்றப்போவதாக அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருட மாநாட்டில் பல விஷயங்களை பகிர்ந்து மாற்றி இருக்கின்றனர்.

அப்போது பேசிய, மார்க் ஜூக்கர்பர்க் பேஸ்புக் நிறுவனத்தின் 

 பெயரை மெட்டா என மாற்றி உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

மேலும், அவர் கூறி இருப்பதாவது, சமூக பிரச்சினைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம்.

கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என தெரிவித்து இருக்கிறார்.

அதே சமயம் தங்கள் ஆப்களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை என தெரிவித்து உள்ளார்.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!