நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீரில் பின்னிப்பிணைந்த பாம்புகள்: இது காதலா? கிரோதமா?

 இந்த பாம்புகளுக்கு இடையில் இருப்பது காதலா? கிரோதமா? இவை அன்பால் பின்னிப்பிணைந்துள்ளனவா? அல்லது சண்டையிடுகின்றனவா?


இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

இரண்டு பாம்புகள்  ஒன்றுடன் ஒன்று சுழன்று கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, இதை சமூக ஊடக பயனர்கள் 'காதல் நடனம்' என்று அழைத்து வருகின்றனர். 

ஆனால் இந்த பாம்புகளுக்கு இடையில் இருப்பது காதலா? கிரோதமா? இவை அன்பால் பின்னிப்பிணைந்துள்ளனவா? அல்லது சண்டையிடுகின்றனவா? 

‘ஹெலிகாப்டர்_யாத்ரா’ என்ற பயனரால் சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ 14,000க்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் , சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, சுமார் எட்டு அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் தண்ணீரில் மெதுவாக சுற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. பாம்புகள் ஒரு கணம் நின்று, ஆக்ரோஷமாக ஒன்றையொன்று சுழற்றி சுழற்றத் தொடங்கி, ஆவேசமாக தண்ணீரைத் தெறிக்கத் துவங்குகின்றன. 

இந்த வீடியோ பார்வையாளர்களின் கற்பனை குதிரைகளை வேகமாக ஓட வைத்துள்ளது. இரண்டு பாம்புகளும் இனச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனவா, இது ஏதாவது நடனத்தின் வடிவமா அல்லது இவை சண்டை இடுகின்றனவா? என நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 

பாம்புகளின் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

பல சமூக ஊடக  பயனர்கள் இது ஆண் மற்றும் பெண் பாம்பிற்கு இடையிலான ஒரு அழகான நடனம் என்று கூறுகின்றனர். ஆனால் சிலரோ, இது காதலும் அல்ல நடனமும் அல்ல, இரு பாம்புகளும் கடுமையான சண்டையில் ஈடுபடுள்ளன என உறுதியாகக் கூறுகிறார்கள். 

சிலரோ, இந்த வீடியோவில் காணப்படுவது, பாம்புகளின் இனச்சேர்க்கையோ நடனமோ அல்ல, இது ஒரே வகையைச் சேர்ந்த இரு ஆண் பாம்புகளுக்கு இடையிலான மல்யுத்தப் போட்டி என கமெண்ட் செய்துள்ளார்கள்.

எப்படி இருந்தாலும், இந்த பாம்புகளின் வீடியோ நெட்டிசன்களை மகிழ்வித்து அவர்களின் கற்பனையையும் அதிகரித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


ALSO READ : பூமியின் அதிசயம்: உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!