நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கராரா டீல் பேசி கரெக்ட் பண்ண குரங்கு, ப்ப்பா... என வியக்கும் நெட்டிசன்கள்

 குரங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்வது இயல்புதான். அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. 


இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

மனிதன் குரங்கிலிருந்து  தோன்றினான் என கூறுகிறோம். அதைப் போலவே, இன்னும் நம்மில் பலரில் அதற்கான அடையாளங்கள் தெரியத்தான் செய்கின்றன. ஆனால், குரங்குகள் மனிதர்களைப் போல நடந்துகொள்வதும் இயல்புதான். அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. 

ஒரு குழந்தையைப் போன்ற பழக்கவழக்கங்களுடன் காணப்படும் இந்த குரங்கின் அறிவாளித்தனத்தைக் கண்டு இணையவாசிகள் ஆச்சரியப்படுகின்றனர். 

ஒரு குரங்கு ஒரு மனிதனின் கண்ணாடிகளை திருடி விடுகிறது. தனக்கு எதுவும் கிடைக்காமல் அந்த கண்ணாடியைத் திருப்பித் தர மாட்டேன் என அடம்பிடிக்கிறது. இந்த வேடிக்கையான வீடியோவை IPS அதிகாரி ரூபின் ஷர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  அவர் வீடியோவில், தலைப்பாக, "ஏக் ஹாத் தோ, ஏக ஹாத் லோ", அதாவது "அந்த கையால் கொடுத்து இந்த கையால் எடுத்துக்கொள்" என எழுதியுள்ளார். 

குரங்கின் அந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவில் , குரங்கு ஒரு இரும்பு மெஷ் மேல் அமர்ந்திருப்பது தெரிகிறது. மாம்பழ பானம் தன் கையில் வந்து சேரும் வரை, அந்த குரங்கு கண்ணாடியை கவனமாக கையிலேயே பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன் கண்ணாடியை களவாடிய குரங்கிடமிருந்து அதை திரும்பப்பெற அந்த நபர் எவ்வளவோ பேசிப்பார்த்தாலும், புத்திசாலியான குரங்கு, தனக்கு எதுவும் கிடைக்காமல் கண்ணாடியை கொடுக்கக்கூடாது என உறுதியாக இருக்கிறது. 

றுதியாக அந்த நபருக்கும் குரங்குக்கும் இடையில் ஒரு ஒபந்தம் உருவாகி, கண்ணாடியைத் திருப்பித்தர, குரங்குக்கு மாம்பழ பானம் கொடுக்கப்படுகிறது. 

இந்த வீடியோ வைரல் ஆகி இணைய வாசிகளை கவர்ந்துள்ளது. இதற்கு பலர் பலவித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 

சிலாரது கமெண்டுகளை இங்கே காணலாம்: 

குரங்கின் புத்திக்கூர்மையை ஒரு பயனர் வியந்து பாராட்டினார்:

சில பயனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 

பதிவேற்றப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ சுமார் 20,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.


ALSO READ : இறந்தவர் சாம்பலில் இருந்து நகைகள் செய்யும் வினோத பெண்மணி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!