நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இளவரசியாக தனது கடைசி பிறந்தநாளை கொண்டாடிய ஜப்பான் இளவரசி...

 காதலுக்காக தன்னுடைய அரச குடும்பத் தகுதியையே விட்டுக்கொடுக்கும் ஜப்பான் இளவரசி மகோ, இளவரசியாக தனது கடைசி பிறந்தநாளை கொண்டாடினார்.

பல ஆண்டு கால சர்ச்சைக்குப் பிறகு ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ, தன்னுடைய வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவர்கள் வருகிற 26ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் ஜப்பான் இளவரசி மாகோ தனது 30வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதுவே ஜப்பான் இளவரசி என்ற பட்டத்துடனும், அரச குடும்ப பாரம்பரிய முறைப்படியும் அவர் கொண்டாடும் கடைசி பிறந்த நாளாகும். திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி அமெரிக்காவில் குடியேறவிருப்பதாக கூறப்படுகிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!