நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இந்த ஒரே ஒரு சாதம் தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்குமாம்! வெறும் 10 நிமிடத்தில் எப்படி தயாரிப்பது?

கறிவேப்பிலை நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் நிலையில், ஆனால் நாம் அதனை சாப்பிடும் போது ஒதுக்கி வைப்பதை தான் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆம் வயிறு, குடல் போன்ற உறுப்புகளை சுத்தம் செய்து குடல் சம்பந்தமாக நோய்களை தவிர்ப்பதுடன், தேவையற்ற கொழுப்பு உடம்பில் சேராமல் தடுக்கின்றது. மேலும் கண் பார்வை மற்றும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்கின்றது. பல நன்மைகள் அளிக்கும் கறிவேப்பிலை மிகவும் சுலபமாக சுவையான சாதம் தயார் செய்வதை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன்,
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
நெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

பொடிக்க:

மிளகு, கசகசா - தலா 1 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்,
முந்திரி - 4,
கறிவேப்பிலை - 1 கப்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய் வற்றல் - 6.

செய்முறை

கறிவேப்பிலையை சுத்தம் செய்து வெறும் வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்தெடுங்கள்.

பிறகு மிளகு, சீரகம், கசகசா, மிளகாய் வற்றல், முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை வறுத்தெடுத்து ஆறியதும் கறிவேப்பிலை உட்பட வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பொடித்து வையுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்து, வேர்க்கடலை, கடலைப் பருப்பு போட்டு தாளித்த பின்னர் அதில் பொடித்த பொடி, சாதம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!