நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கருவில் உருவாகும் முதல் உறுப்பு எது தெரியுமா? இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பும் அதுதான்

 நம்ப முடியாத சில ஆச்சரியங்கள் பல குவிந்து கிடக்கின்றது. அவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்ளுவோம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு இதயம்.


உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அதை வரைந்தவர் லியோனார்டோ டாவின்சி. இவர் தான் நாம் இன்று பயன்படுத்தும் கத்தரிக்கோலையும் கண்டுபிடித்தார்.

ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.

ஒரு நபர் இறந்த பிறகும் அவரது உடலில் இருந்து வாயு வெளியேறலாம். ஒருவரது உடலில் இருக்கும் எந்த வகையான வாயுவாக இருந்தாலும், இறந்த பிறகு தசைகளில் ஏற்படும் இறுக்கத்தால் வாயு தானாக உடலில் இருந்து வெளியேறிவிடும்.

கடல் குதிரை மற்றும் பைப்பிஷ் இரண்டும் தான் கடல் வாழ் உயிரினங்களில் கருத்தரிக்கும் ஆண் உயிரினங்கள் ஆகும்.


உண்மையான தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாது. சேமித்து வைக்கப்பட்ட உண்மையான தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாப்பிடும் தரம் கொண்டிருக்கும், கெட்டுப் போகாது.

உலகத்தில் உற்பத்தியாகும் பாதி அளவு ஆக்ஸிஜன் கடலில் இருந்து தான் வருகிறதாம். நமக்கான முழு ஆக்ஸிஜன் மரத்தில் இருந்து கிடைப்பதில்லை.

கடலில் இருக்கும் சிறிய நீர்வாழ் தாவரங்கள் இருக்கின்றன. இவை கார்பன்டை ஆக்சைடு மற்றும் சூரிய ஒளியை உட்கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து வெளிபடுத்துகின்றன.  



ALSO READ : பேஸ்புக் வலைத்தளத்தின் புதிய பெயரை வெளியிட்ட மார்க் - என்ன தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!