நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மக்கள் அதிகம் நம்புவர்கள் பட்டியலில் மருத்துவர்கள் முதலிடம் ... நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்கு தெரியுமா?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இப்ஸோஸ் என்ற பன்னாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம், மக்கள் எந்த பிரிவினரை அதிகம் நம்புகிறார்கள் என்ற ஆய்வை மேற்கொண்டது. அதில் மக்கள் அதிகமாக மருத்துவர்களையே நம்புவதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களை மட்டுமே நம்புவதாக 54 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு அடுத்த படியாக விஞ்ஞானிகள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என 51 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். அடுத்தபடியாக ஆசிரியர்களை அதிகம் நம்புவதாக 43 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். சாதாரண பொது மக்களை 27 சதவீதத்தினரும் ராணுவ வீரர்களை 22 சதவீதத்தினரும் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அரசியல்வாதிகள் முதலிடத்தை பிடித்துள்ளவர்கள். 52 சதவீத மக்கள் அரசியல்வாதிகளை நம்ப கூடாது என தெரிவித்துள்ளனர். இதில் இந்திய மக்களும் மலேசிய மக்களும் அரசியல்வாதிகள் மேல் நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அர்ஜென்டினா மற்றும் கொலம்பிய மக்கள் அரசியல்வாதிகளை ஒட்டு மொத்தமாக நிராகரித்துள்ளனர். நம்பக் கூடாதவர்களின் பட்டியலில் அடுத்து இடம் பிடித்துள்ளவர்கள் அரசு அமைச்சர்கள். அவர்களுக்கு மைனல் 39 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. விளம்பரதாரர்களும் வங்கியாளர்களும் அடுத்தடுத்து இடம் பிடித்துள்ளனர். நம்பக் கூடாதவர்கள் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்துள்ளவர்கள் பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு மைனஸ் பத்து சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!