நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயிரிழந்த துணை பறவை: பாசத்தில் துடிதுடித்த ஆண் பறவை! சில நொடிகளில் உயிரை மாய்த்துக் கொண்ட சோக காட்சி

 பறவை ஒன்று இறந்துவிடவே தனது இறந்த சோகத்தில் ஆண் பறவையும் சில நொடிகளில் உயிரிழந்துள்ள காட்சி காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அன்பினால் இயங்கிக்கொண்டிருக்கும் உலகத்தில் மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு ஜீவன்களும் அன்பினால் அனைவரையும் நெகிழ வைக்கின்றது, இதனை பலமுறை காணொளி வாயிலாக நாம் அவதானித்திருக்கிறோம்.

இங்கு பறவை ஒன்று தனது துணை இறந்ததால் சோகத்தில் அதன் அருகே நின்று பாசப்போராட்டம் நிகழ்த்திய நிலையில், ஒரு சில நொடியில் குறித்த ஆண் பறவையும் வாழ விரும்பாமல் உயிரிழந்துள்ளது. இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு அன்பின் எடுத்துக்காட்டாக இந்த ஐந்தறிவு ஜீவன்களின் செயல் கண்கலங்க வைக்கின்றது.

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!