நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அப்பாவோட வேலைல தொந்தரவு தர்றது தான் எவ்ளோ ஜாலியா இருக்கு! – வைரல் வீடியோ

 ப்ளூம்பெர்க் டிவி நேரலையில் டான்ஸ் ஆடி, அப்பாவை போன்று சைகைகள் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குட்டிச் சிறுவன்.


கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பினர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வீட்டில் இருந்தே பணியாற்றி வருகின்றனர். போதுமான அலுவலக வசதிகள் இல்லாத காரணத்தால் வீட்டில் அனைவரையும் அமைதியாக இருக்க வைத்துவிட்டு பிறகு நாம் ஆன்லைன் மீட்டிங்கில் பேச வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இது நமக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. உலக அளவிலான பிரச்சனையாக இருந்து வருகிறது.

லைவ் செய்திகளில் இப்படி குறுக்கீடுகள் வரும்போது என்ன செய்வது என்று அறியாமல் திணறும் சூழலும் நிலவத்தான் செய்கிறது. ஜெர்மன் மார்ஷல் ஃபண்ட் மூத்த அதிகாரி ப்ளூம்பெர்க் செய்திகளுக்கு அளித்த பேட்டி ஒன்றின் குறுக்கே அவருடைய மகன் வரும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பந்தெஸ்வங்கியின் தலைவர் ஜென்ஸ் வெய்ட்மான் தன்னுடைய பதவியில் இருந்து விலகியது குறித்து மிகவும் தீவிரமாக அவர் பேசி வந்த போது இடையில் குறுக்கிட்ட அவருடைய மகன், அவருக்கு பின்னால் நின்று கொண்டு அவரை போலவே சைகை காட்டவும், ஆடவும், இங்கும் அங்குமாக ஓடவும் செய்து கொண்டிருந்தார். தன்னுடைய அப்பாவின் முழுமையான கவனத்தை பெற அந்த சிறுவன் எவ்வளவோ முயற்சி செய்த போதும் அவர் அந்த நேரலையை முடித்துவிட்டார்.

இந்த இறுக்கமான சூழலை தளர்த்தும் வகையில் செய்தி வாசிப்பாளர் ஜோனதன் ஃபெர்ரோ, க்ரீக் அரசுக்காக உங்களின் மகன் வேலை செய்கிறாரா என்ற போது சிரிப்பலைகள் பரவியடு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



ALSO READ : காயங்களை கடிதங்களால் குணமாக்கிய ராஷ்பின்

Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!