நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் அவல் புளியோதரை

காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். வெள்ளை நிறத்தில் இருக்கும் அவலில் உடலுக்கு தேவைப்படும் கார்போ ஹைட்ரேட், கலோரி உள்ளது.

தேவையான பொருட்கள்

கெட்டி அவல் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
புளிக்கரைசல் - 1/2 கப்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
துருவிய வெல்லம் - 1 டீஸ்பூன்.

தாளிக்க

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வரமிளகாய் -
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - 6 இதழ்கள்,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்.

செய்முறை

அவலைக் கழுவி நீரை வடிகட்டி அரைமணி நேரம் மூடி வைக்கவும்.

இடையிடையே திறந்து கைகளால் நன்றாகக் கலந்துவிடவும்.

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து புளிக்கரைசல் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் ஊறிய அவலைச் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

அவல் புளியோதரை தயார்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!