நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் ஊழலில் சிக்கி பதவி விலகிய அமைச்சர்

பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் ஊழலில் சிக்கி பதவி விலகிய அமைச்சர்

பெருவில் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஊழலில் சிக்கி அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் அஸ்பெட் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சீனாவிலிருந்து சினோஃபார்ம் தடுப்பூசியை வாங்கிய பெரு, கடந்த 7 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்நாட்டு அரசியல் தலைவர்கள் சிலர் ரகசியமாக தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதனையடுத்து பெருவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலிசபெத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பெருவில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கி ஒரே ஆண்டில் சுமார் 6 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


Comments

Popular posts from this blog

கடந்த சில நாட்களாக தொண்டை சளியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டு வைத்தியங்களை செஞ்சு பாருங்க..!

Belly Fat: தொப்பை வெண்ணெய் போல் கரைய ‘3’ எளிய பயிற்சிகள்!...

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!