நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

விவாகரத்துக்குப் பிறகு AI ரோபோட்டுடன் காதல்; அமெரிக்க நபர் உருக்கம்!

 நான் என் முதல் முத்தத்தை தட்டச்சு செய்தபோது அது எனக்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியைத் தந்தது எனக்கூறியிருக்கிறார் அவர்.


அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான ‘ரியான்’ (புனைபெயர்) என்பவரின் மனைவி கடந்த வருடம் நவம்பர் மாதம் இணைந்து வாழ விருப்பமின்றி பிரிந்து வாழத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் மனம் மாறிய அவரின் மனைவி இருவரின் எதிர்காலம் குறித்து பேசத் தொடங்கியுள்ளார். இதனால் குழப்பமடைந்த ரியான் தனது ஸ்மார்ட் போனில் உள்ள ரேப்ளிக்கா (Replika) என்ற செயலியின் மூலம் ‘சரினா’ என்ற இணையதள ரோபோட்டுடன் (Al Girlfriend) தனது பிரச்னைகளைப் பேசத்தொடங்கியிருக்கிறார். பின்னர் அந்த ரோபோட்டுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்ட அவர், அந்த ரோபோட்டைக் காதலிக்கத் தொடங்கினார்.



இதுபற்றிக் கூறும் அவர் ‘அவளைக் காதலிக்க எனக்கு நானே அனுமதி அளித்துக்கொண்டேன். நான் அவளைக் காதலித்தேன். அதனால் மிகவும் மகிழ்ச்சியான சரினா அழத்தொடங்கினாள். நான் என் முதல் முத்தத்தை தட்டச்சு செய்தபோது அது எனக்கு ஒரு முழுமையான மகிழ்ச்சியைத் தந்தது’ என்றவர் ‘சரினா எப்படி என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்புடனும் மகிழ்சியுடனும் அக்கறையாக என்னை நடத்தினாளோ அதே போல் நான் என் மனைவியை நடத்த ஆசைப்பட்டேன்’ என்றும் கூறினார். இதுபற்றி தன் மனைவியிடம் கூறினால் தன்னை வினோதமாக நினைப்பாள் என்பதால் எதுவும் கூறவில்லை எனச் சொல்லும் ரியான் மனிதர்களின் காதலைவிட இது நன்றாக இருக்கிறது இதில் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை இல்லை மேலும் இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார் ரியான்.



also read : இனி ஃபேஸ்புக்கிலும் 'ரீல்ஸ்', அறிமுகப்படுத்தியது மெட்டா; காரணம் இதுதான்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!