நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் மிளிர்ந்த ”தமிழ்” பெருமைமிக்க தருணம்

 உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவில், தமிழின் தொன்மையை பறைசாற்றும் வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது.



துபாய் Expo 2020

உலகின் மிகப்பெரிய கண்காட்சிகளில் ஒன்றான துபாய் Expo 2020ல் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகள் கலந்து கொள்கின்றன.

கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.

அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு எனப் பல தளங்களில் பரிணமிக்கும் இந்தக் கண்காட்சியில் தமிழக அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


புர்ஜ் கலிபாவில் தமிழ்

தமிழரின் பெருமையை பறைசாற்றும் விதமாக புர்ஜ் கலிபாவில் நேற்றிரவு தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் விளக்கும விதமாக கீழடி குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது, இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு ரசித்தார்.


ALSO READ : இதயம், கண் சார்ந்த பரிசோதனைகளை ஸ்மார்ட்போனிலேயே செய்யும் அம்சம்... கூகுள் அறிவிப்பு

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!