நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இதயம், கண் சார்ந்த பரிசோதனைகளை ஸ்மார்ட்போனிலேயே செய்யும் அம்சம்... கூகுள் அறிவிப்பு

ஸ்மார்ட்போன் மூலம் இதயம், கண் பரிசோதனைகளை செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. 


இதன்மூலம் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.


இதுகுறித்து கூகுள் கூறியதாவது,

இதய துடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்டறியும் செயல்முறையை நாங்கள் பரிசோதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட்போனை நெஞ்சில் வைப்பதன் மூலம்  மைக்ரோபோன்களை கொண்டு இதயம் துடிக்கும் சத்தத்தை பதிவு செய்ய முடியும். மருத்துவர்கள் ஸ்தெதஸ்கோப் உதவியை கொண்டு இதயம் மற்றும் நுரையீரல் சார்ந்த ஆரோக்கியத்தை கண்டறிகின்றனர். இதனை ஸ்மார்ட்போன் மைக்ரோபோனை கொண்டே செய்ய நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.


இந்த மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் விரைவில் ஸ்மார்ட்போன் செயல்முறையை செயல்படுத்துவோம்.


அதேபோல ஸ்மார்ட்போன் மூலம் கண்பரிசோதனை செய்யும் அம்சத்தையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 


ஸ்மார்ட்போன் கேமராக்களை கொண்டு நீரிழிவு மற்றும் நீரிழிவு அல்லாத கண் சார்ந்த பிரச்சனைகளை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இதற்காக EyePACS மற்றும் Chang Gung மருத்துவமனையின் உதவியை நாடியுள்ளோம்.


எங்கள் விஞ்ஞானிகள் மருத்துவர்களின் உதவியுடன் இந்த ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!