நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உணவு உண்பது எதற்காக?

இயந்திரம் தொடர்ந்து இயங்க டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள் எப்படித் தேவையோ, அதுபோல் உடல் இயக்கம் தொடர்ந்திட, உணவு என்ற எரிபொருள் மிகவும் அவசியம்.
! உடல் உயிர்ப்புடன் இருப்பதற்காகவும், செயல்படுவதற்காகவும், செல் பிரிதல் தொடர்ந்து நடைபெறவும், பழைய செல்கள் இறந்து- புதிய செல்கள் உருவாகி உடல் வளர்ச்சியை அடைவதற்காகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காகவும்... இப்படிப் பல காரணங்களுக்காக உணவு உட்கொள்ள வேண்டிய அவசியம் எல்லா உயிரினத்துக்கும் உண்டு.

! நமது உடல் சிறந்ததொரு இயந்திரம் போன்றது. இயந்திரம் தொடர்ந்து இயங்க டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள் எப்படித் தேவையோ, அதுபோல் உடல் இயக்கம் தொடர்ந்திட, உணவு என்ற எரிபொருள் மிகவும் அவசியம்.

! உடல்நிலை, வயது, உடல் உழைப்பு, உயரம் இவற்றுக்கு ஏற்ப உணவில், ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் சேருவதுதான் சீரான உணவு முறை எனப்படும். இவ்வாறு சேரும்போது உடல் நலம் பேணப்படுவதால் அதை சத்துணவு என்றும் சொல்கிறோம்.

! உடலுக்கு புரதம், மாவு, கொழுப்பு, தண்ணீர், வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்கள் மற்றும் தனிமங்கள் போன்ற சத்துக்கள் தேவை. புரதச் சத்து, உடலின் வளர்ச்சிக்குத் தேவை. மாவுச் சத்து, உடல் இயங்குவதற்கான சக்தியைத் தருகிறது. கொழுப்புச் சத்து உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருகிறது. கொழுப்புச் சத்தும், மாவுச் சத்தும் சரியான அளவில் சேர்ந்தால்தான் புரதச் சத்தால் உடல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செயல்பட முடியும். இப்படி ஒவ்வொரு பணியையும் பிரித்துச் செய்கிற இந்த சத்துக்கள், மனிதர்கள் அனைவருக்கும் மிகவும் அவசியம்.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!