நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

சூரியனை நெருங்கும் விண்கலம்!

சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒரு விண்கலத்தை (இஎஸ்ஏ) அனுப்பியுள்ளது. இதன் "ஆர்பிட்டர்', சூரியனை மிக நெருங்கி ஆய்வில் ஈடுபடத் தயாராகியுள்ளது.

வரும் மார்ச் 26-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் சூரியனை இந்த சோலார் ஆர்பிட்டர் நெருக்கமாகக் கடந்து செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக இஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

அப்படி மார்ச் 26-ஆம் தேதி என்னதான் நடைபெறும்? சூரியனை நெருங்கும் நிகழ்வின்போது, சூரியனிலிருந்து பூமிக்கு உள்ள தொலைவில் மூன்றில் ஒரு பங்கு தொலைவில் சோலார் ஆர்பிட்டர் கடந்து செல்லும்.

இப்போது ஆர்பிட்டர் சூரியனிலிருந்து 75 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. இதே தொலைவை 2020, ஜூன் 15-ஆம் தேதியும் ஆர்பிட்டர் கடந்திருந்தது.

சூரியனை ஆர்பிட்டர் நெருங்கியதும், அது தனது அனைத்து உபகரணங்களையும்
பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கும். அதன் ரிமோட் சென்சிங் கருவிகளும் இந்த நிகழ்வை ஆய்வு செய்யத் தயாராக உள்ளன. எந்த ஒரு பெரிய நிகழ்வும் நடைபெறவில்லை எனினும், சூரிய காற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து நிறைய ஆய்வு செய்ய முடியும் என இஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

இஎஸ்ஏவின் சோலார் ஆர்பிட்டர் இப்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே பாதி வழியில் உள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் ஹினோட், ஐஆர்ஐஎஸ் போன்ற விண்கலங்கள் மூலம், சோலார் ஆர்பிட்டரின் தரவுகளைத் தொகுக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

இஎஸ்ஏ சோலார் ஆர்பிட்டரின் முன்னோடியாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் 2018-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள "பார்க்கர்' சோலார் விண்கலம் திகழ்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்ததன் மூலம், "வரலாற்றில் முதல் முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் தொட்டுள்ளது' என நாசா அறிவித்தது.

கடந்த பிப்ரவரியில் 11-ஆவது முறை சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வந்த பார்க்கர், தனது 7 ஆண்டு திட்டத்தில் சூரியனை 24 முறை வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!