நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

நீங்களும் பூ போன்ற இட்லி செய்யலாம்! இந்த ஒரு பொருள மறக்காம சேர்த்திடுங்க....

 தமிழர்களின் காலை உணவில் பெரும்பாலும் இடம்பிடிக்கும் பொருள் இட்லி தான், சுடச்சுட இட்லியுடன் சாம்பார், சட்னி வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதியானது.

6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை, உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு இட்லி, ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

பல நன்மைகளை தன்னுள் அடக்கியுள்ள இட்லியை பஞ்சு போல சுடுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்


இட்லி அரிசி- 4 கப்

உளுந்து- 1 கப்

ஜவ்வரிசி- 1/2 கப்

வெந்தயம்- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு


செய்முறை

முதலில் இட்லி அரிசி, ஜவ்வரிசியை நன்றாக கழுவிவிட்டு 4 லிருந்து 5 மணிநேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.


உளுந்தை நன்றாக அலசிவிட்டு, சிறிது வெந்தயம் கலந்து ஊறவைத்துக் கொள்ளவும், வெந்தயம் 8 லிருந்து 10 வரை சேர்த்தால் போதுமானது.


நீங்கள் விரும்பாவிட்டால் வெந்தயம் சேர்க்காமலும் இட்லி மாவு அரைக்கலாம்.


அரிசி, உளுந்து நன்றாக ஊறிய பின்னர், முதலில் உளுந்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், சுமார் 20- 30 நிமிடங்கள் வரை ஆட்டினால் உளுந்து நன்றாக பொங்கி வரும், சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும்.


அடுத்ததாக அரிசி, ஜவ்வரிசியை ஆட்டவும், இதனை உளுந்து மாவுடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.


இட்லி மாவை சுமார் 8 மணிநேரங்கள் புளிக்கவைத்து விட்டு, இட்லி ஊற்றினால் மிகவும் மெதுவான பூ போன்ற இட்லி தயாராகிவிடும்!!!


ALSO READ : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!