நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!

 இன்ஸ்டாகிராம் வந்துள்ள நடிகை ஜோதிகாவை ரசிகர்கள் பலரும் உச்சாகமாக வரவேற்று உள்ளனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து பிரபலமான கதாநாயகியாக இருப்பவர் நடிகை ஜோதிகா. கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் செய்து கொண்டப்பின் சில வருடங்கள் கழித்து ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகை ஜோதிகாவின் (Jyothika) நடிப்பில் உடன்பிறப்பே படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் ஜோதிகா சமூக வலைத்தள (Social Media) பக்கங்களிலும் தலை காட்டாமல் இருந்த நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் (Instagram) இணைந்துள்ளார். தன்னுடைய முதல் பதிவில் முதன்முறையாக சோசியல் மீடியாவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஜோதிகா, தன்னுடைய ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்த நிறைய நல்ல விஷயங்களை பகிர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள ஜோதிகாவை அவரது கணவரும் நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். அவர் தன்னுடைய கமெண்டில் என் மனைவி வலிமையானவள். முதன்முறையாக உன்னை இன்ஸ்டாவில் பார்ப்பது த்ரில்லாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் வந்துள்ள ஜோதிகாவை வாழ்த்தி தெரிவித்து வருன்றனர்.


முதல் பதிவாக அவர் இமயமலையில் தேசியக் கொடியை ஏந்திய புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் அபூர்வமானது என்றும் தனது நண்பர்களுடன் இணைந்து எடுத்த இந்தப் புகைப்படம் தனக்கு மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. 

இதற்கிடையில் நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கிய முதல் நாளிலேயே அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 



also read : அவனி லெகரா: இந்திய பாராலிம்பிக் வரலாற்றில் முதல் தங்கம் வென்ற பெண் - 8 முக்கிய தகவல்கள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!