நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Indian Food: முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்

 உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று சொன்னவர், இரு மடங்கு பணம் செலுத்த தயாராக வைத்த இந்திய உணவு...


முதல் முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரிய மனிதரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது

முதன்முறையாக இந்திய உணவை சுவைப்பவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. டக்கரா ரே மற்றும் லம்போகின்னி தம்பதிகள், இந்திய உணவை முயற்சித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாகிறது.

watch video

இந்த ஜோடி அமெரிக்காவின் கனெக்டிகட்டில் உள்ள பொனானி டேக் அவுட் இந்தியன் கிச்சன் (Bonani Take Out Indian Kitchen in Connecticut) என்ற உணவகத்திற்கு சென்றது. அவர்கள் சாதம் மற்றும் பராத்தாவை சாப்பிட்டனர்.  

Lamb Vindaloo என்ற உணவுக்கும் ஆர்டர் கொடுத்த தம்பதியினர், இந்த உணவு சுவையாக இல்லாவிட்டால், பணம் செலுத்தப் போவதில்லை என்று பணியாளரிடம் தெரிவித்தார். அவருக்கு பதிலளித்த உணவகப் பணியாளர், இது ருசியான உணவு, இனிப்பாக இருக்காது, ஆனால் கொஞ்சம் காரமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

ஆனால் உணவை ஒரு வாய் சாப்பிடவுடன், மேலும் சாதம் வாங்கிய லம்போகின்னி, "நான் ஏற்கனவே ஒரு இந்திய உணவுப் பிரியன், இந்த உணவு என்னை மேலும் ருசிக்கு அடிமையாக்குகிறது" என்று சொல்லிவிட்டு, உணவை சாப்பிட்ட வீடியோ வைரலாகிறது. 

"முதலில் பணம் கொடுக்கமாட்டேன் என்று சொன்னவர், பிறகு உணவுக்கான விலையைவிட இரு மடங்கு பணம் செலுத்தப் போகிறேன்," என்று தெரிவித்தார். அவருக்கு உணவை மிகவும் பிடித்துவிட்டது. திருப்தியாக உணவை சாப்பிட்ட அவர், மேலும் சில உணவு வகைகளை வாங்கிச் சென்றார்.  


ALSO READ : Be Careful: கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து A படங்களை பார்த்த வினோத நபர் யார் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!