நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரே இரவில் கழிவறையை சுத்தப்படுத்த ஒரு பல் பூண்டு போதும்..எப்படி தெரியுமா..?

 நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் கழிவறையில் ஒரே இரவில் மாயங்களை ஏற்படுத்தி கிருமிகளை அழிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ?


ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையானது மூன்று விஷயம் தான் உணவு, உடை , இருப்பிடம். அதிலும் நாம் வாழும் வீடு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். வசிக்கும் வீடு வாடகை வீடோ, சொந்த வீடோ ஆனால் வீட்டை பராமரிக்கும் வேலை என்பது ஒன்று தான். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

நம் வீட்டிலேயே மிகவும் அசுத்தமான இடம் என்றால் தான் அது கழிவறை தான். அதை சுத்தமாக வைத்துக்கொள்ள பல பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் கழிவறையில் ஒரே இரவில் மாயங்களை ஏற்படுத்தி கிருமிகளை அழிக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா ?

ஆம். அது தான் பூண்டு. ஒரு பல் பூண்டு கழிவறையை சுத்தப்படுத்த உதவும்.பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பூண்டில் அற்புதமான சுத்தப்படுத்தும் தன்மையும் இருக்கிறது.


பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. மேலும் இந்த பொருள் தான் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அண்ட விடாமல் தடுக்கிறது.இப்போது பூண்டை வைத்து கழிவறையை  எப்படி சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

பூண்டை வைத்து கழிவறையை சுத்தம் செய்ய இரண்டு வழிகள் இதோ..

1. நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஒரு முறை தேய்த்து கழுவினால், கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்குவதோடு கிருமிகளும் அழிந்துவிடும்.

2.ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீரானது நன்கு கொதித்த பின்பு இரண்டு பல் பூண்டுகளை பொடியாக நறுக்கி போட்டு நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்பு 15 நிமிடங்கள் கழித்து அந்நீரை கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் தேய்த்து கழுவ வேண்டும்.

கழிவறையில் இருக்கும் துர்நாற்றத்தில் குடியிருப்பது பாக்டீரியாக்கள் தான். அதை அழிக்க பூண்டு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் கழிவறையில் இருக்கும் கிருமிகளை அழிக்க இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!