நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

காபூல் விமான நிலையத்தில் ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 3000, ஒரு தட்டு சோறு ரூ. 7500!!

 அமெரிக்கா கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 70,700 பேரை வெளியேற்றியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். 


காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, தாலிபான்களின் பயங்கரவாத ஆட்சிமுறையிலிருந்து தப்பிக்கும் ஆசையுடன் காபூல் விமான நிலையத்தை அடையும் மக்கள், பசி மற்றும் தாகத்தால் தவிக்கின்றனர். விமான நிலையத்திற்கு வெளியே உணவு மற்றும் பானப் பொருட்கள் பல மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. 

இதுமட்டுமின்றி, கடைக்காரர்கள் ஆப்கான் நாணயத்திற்கு பதிலாக டாலர்களை கோருகின்றனர். அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானியர்களுக்கு உதவி வந்தாலும், அனைவருக்கும் உணவு கிடைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.

டாலரில் பணம் செலுத்த வேண்டிய விலை

காபூல் (Kabul) விமான நிலையத்திற்கு வெளியே, ஒரு தண்ணீர் பாட்டில் 40 டாலர், அதாவது சுமார் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு தட்டு சோறு, 100 டாலருக்கு விற்கப்படுகின்றது. இது இந்திய நாணயத்தின் படி சுமார் 7500 ரூபாய் ஆகும். மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடைக்காரர்கள் ஆப்கானிஸ்தானின் நாணயத்திற்கு பதிலாக டாலர்களில் பணம் செலுத்துமாறு கோருகின்றனர்.

துருப்புக்கள் மக்களுக்கு உதவி வருகின்றன 

ஆப்கானிஸ்தானை (Afghanistan) விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் பசி மற்றும் தாகத்தால் இறக்கும் நிலையில் உள்ளனர். எதுவும் சாப்பிடாமல், நீர் கூட அருந்தாமல் வெயிலில் நிற்க வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக பலர் மயங்கி விழுந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  

இருப்பினும், தாலிபான்கள் அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக அவர்களை அடித்து வருகின்றனர். இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க (America) மற்றும் பிரிட்டிஷ் வீரர்கள் ஆப்கானியர்களுக்கு உதவுகிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் தற்காலிக வீடுகளை கட்டி குடியிருப்புவாசிகளுக்கு படையினர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுகளை வழங்கு வருகின்றனர். இது தவிர, ஆப்கானிஸ்தானின் சிறு குழந்தைகளுக்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வீரர்கள் விநியோகிப்பதையும் காண முடிகிறது.

இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியுள்ளன...

தகவலின் படி, அமெரிக்கா கடந்த 10 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 70,700 பேரை வெளியேற்றியுள்ளது. இருப்பினும், ஆப்கானிஸ்தானின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் காபூல் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 2.5 லட்சம் மக்கள் தாலிபான்களால் அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்களில் 60 ஆயிரம் பேர் மட்டுமே அதன் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் காபூலை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டுப் படைகளுக்கு தாலிபான் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சில நாட்களில் சுமார் 2 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவது மிகக் கடினம் என்பது கசப்பான உண்மையாகும்.

விமான நிலையத்தை அடைவதற்கு தடையாக செயல்படும் தாலிபான் 

விமான நிலையத்திற்குள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் வீரர்கள் இருந்தாலும், விமான நிலையம் வெளிப்புறத்தில் தாலிபான்களால் சூழப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தாலிபான் போராளிகளும் உள்ளனர். அவர்கள் மக்கள் விமான நிலையத்தை அடைவதை தடுத்து வருகின்றனர். விமான நிலையம் செல்லும் மக்கள் தாலிபான்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். 

அமெரிக்காவிடம் இருந்து உதவி பெற்று ஏன் சமூகத்தை இழிவுபடுத்துகிறீர்கள் என்று பயங்கரவாதிகள் மக்களிடம் கேட்கிறார்கள்? ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் பிடியில் வந்தது முதல், தாலிபான் கொடூரத்தின் கதைகள் ஒவ்வொரு நாளும் வெளிவந்த நிலையில் உள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலிபான்களால் அதிகம் துன்புறுத்தப்படுகிறார்கள்.


also read : மான்டேரி விரிகுடாவில் சுற்றித்திரியும் சுமார் 90 அடி நீளமுள்ள அரியவகை திமிங்கலங்கள்!

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!