நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

டிஜிட்டலில் உலகம் சுற்ற வருகிறார் சயின்டிஸ்ட் முருகன்...!

 எம்ஜிஆர் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள். சென்னையை பொறுத்தவரை ஸ்டார், மேகலா போன்று ஒரு டஜன் திரையரங்குகள் எம்ஜிஆர், சிவாஜி படங்களை திரையிடுவதற்கென்றே இருந்தன.


1973 மே 11 ஆம் தேதி எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானது. பட்ஜெட்டை பொறுத்தவரை அந்த காலத்து எந்திரன் இந்த உலகம் சுற்றும் வாலிபன் எனலாம்.

தமிழகத்தைச் சேர்ந்த சயின்டிஸ்ட் முருகனாக இதில் எம்ஜிஆர் நடித்திருந்தார்படம் வெளியான போதுஎம்ஜிஆர் ரசிகர்கள் குடும்பத்துடன் வண்டிகட்டிக் கொண்டு வந்து படத்தைப் பார்த்தனர்கொரோனாவுக்கு முன்புவரை தமிழகத்தில் ஏதாவது ஒரு திரையரங்கில் இந்தப் படம் ஓடிக்கொண்டேதான் இருந்தது

உலகம் சுற்றும் வாலிபனை டிஜிட்டலில் மேம்படுத்தி செப்டம்பர் 3 திரையரங்கில் வெளியிடுகின்றனர்இதேபோல் சிவாஜியின் கர்ணனை வெளியிட்ட போது தமிழகம் முழுவதும் புதிய படங்களுக்கு இணையாக ஓடியதுஉலகம் சுற்றும் வாலிபனும் அப்படியொரு வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லைஆனால்ஒரேயொரு குறைஎம்ஜிஆர் ரசிகர்களுக்கான திரையரங்குகள் இல்லாதது.

எம்ஜிஆர் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்சென்னையை பொறுத்தவரை ஸ்டார்மேகலா போன்று ஒரு டஜன் திரையரங்குகள் எம்ஜிஆர்சிவாஜி படங்களை திரையிடுவதற்கென்றே இருந்தனஇப்போது அவற்றில் ஒன்றுகூட இல்லைஅனைத்தையும் இடித்துவிட்டனர்அந்த திரையரங்குகள் இருந்த இடங்கள் மண்டபங்களாகவும்ஷாப்பிங் மால்களாகவும் மாறிவிட்டனமால்களில் இயங்கும் மல்டிபிளக்ஸ்களில் உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டால் ரிக்ஷா ஓட்டுகிறவரும்பூ தொடுக்கிற பெண்மணியும்நரிக்குறவர்களும் எப்படி படத்தை பார்க்க முடியும்



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!