நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கோடிகளை குவித்தாலும், நான் இப்படித் தான் - வைரலாகும் குத்துச்சண்டை வீரரின் புகைப்படம்

கெமரூன் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான பிரான்சிஸ் நிகானு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேஸ்புக்கில் இவர், மிக எளிமையாக காட்சியளிக்கும் வீட்டினுள் இருந்தபடி உணவு உண்ணும் புகைப்படம் பகிரப்பட்டு இருக்கிறது. இவர் இன்றும் எளிய வாழ்வை வாழ்வதாக பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
"இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் பிரான்சிஸ் நீகான்னு... UFC fighter...
உலகப் புகழ்பெற்ற குத்து சண்டை வீரர்...
இந்த விளையாட்டு மூலம் கோடிக்கணக்கில் அவர் பணத்தை சம்பாதித்து விட்டார்... 
அவரை காண பல விஐபிக்கள் மிகப்பெரிய வியாபார நிறுவனங்கள் காத்துக்கொண்டு உள்ளன...
ஆனால் அவர் சிறு வயதில் சரியாக சாப்பிடக்கூட முடியாத அளவில் ஏழ்மையில் இருந்தவர்...
இப்போதும் அவரது சொந்த நாட்டுக்கு கேமரூன் செல்லும்போது தனது பழைய வாழ்க்கை எப்படியோ அப்படியே வாழ்ந்து வருகிறார்...
அவர் சொல்லும் ஒரே வார்த்தை எவ்வளவு எனக்கு பணம் வந்தாலும் என் அம்மாவுக்கு நான் மகன்தான்...
அதை மாற்ற முடியாது..." 

என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இது குறித்த இணைய தேடல்களில் பிரான்சிஸ் நிகானு உண்மையில் தனது நாட்டில் ஏழ்மையான வாழ்வை வாழ்வது தெரியவந்தது. மேலும் கடந்த ஆண்டு அன்னையர் தினத்தன்று பிரான்சிஸ் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ட்விட்டரில் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த பதிவு இணையத்தில் கிடைத்தது. 

அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல் உண்மை தான். ஆனால், இந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!